Friday, August 13, 2010

இந்தியாவுக்கு ஒரு பயணம்

சில மாதங்கள் சென்றதும் மக்களில் பலர் இந்தியாவுக்கு போவதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். இதற்கு முன்பும் நிறையப் பேர் வேறு கலவர நேரங்களில் போயிருக்கிறார்கள். எனவே இம்முறையும் நிறையப்பேர் தலைமன்னார் கடலால் இந்தியாவுக்கு சென்றார்கள். எங்கள் வீடுகளிலும் இந்தப் பேச்சு அடிபட ஆரம்பித்தது. பெரியண்ணாவுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்திருந்ததனால் சற்றுத் தயக்கம் நிலவியது. இன்னும் இந்தியாவுக்கு சென்றால் படிப்பு குழம்பிவிடும் என்ற இன்னொரு குழப்பமும் காணப்பட்டது. இருந்தாலும் உயிர் பயத்திற்கு முன்னால் எல்லாம் தோற்றுப் போய் தமிழ் நாட்டை தஞ்சமடைவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தவமண்ணன் தன் நண்பர் ஒருவர் இந்தியாவுக்கு குடும்பத்துடன் செல்ல அவர்களுடன் இணைந்து அவரும் சென்றுவிட்டார். மீதமாக இருந்தது மம்மி, பப்பா, மூன்று அண்ணாமார், தங்கச்சி மற்றும் நான். ஏழு பேரும் செல்வதற்கு ஒருநாள் குறிக்கப்பட்டது. சிறுவர்களான எங்களுக்கெல்லாம் ஒரே குஷி. படங்களில் பார்த்த இந்தியாவை நேரில் பார்க்கப் போகிறோம் என்பதே த்ரில்லாக இருந்தது. வெகு  விரைவிலேயே அந்த நாளும் வந்தது.
அதற்கு முதல் நாள் முழுவதும் "நாளைக்கு இந்தியா...!  நாளைக்கு  இந்தியா...!"என்று ஒருவருக்கொருவர் சந்தோசமாக சொல்லிக் கொண்டு திரிந்தோம். அடுத்தநாள் எங்கள் ஊரிலிருந்து பொருட்களைத் தயார் பண்ணிக் கொண்டு புறப்பட்டுச் சென்றோம். அன்று மாலையே மன்னர் தீவின் நடுப்பகுதியில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் எருக்கலம்பிட்டியை சென்றடைந்தோம்.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மக்கள் வாழும் மிகப் பெரிய கிராமம் அல்லது சிறு நகரம்.அங்கே ஒருநாள் தங்கிவிட்டு அடுத்தநாள் இரவு நாங்கள் தலைமன்னார் கடற்கரைக்கு பிரயாணப்பட்டு சென்றோம்.

இரவு ஒன்பது மணியிருக்கலாம்.தலைமன்னாரிலிருந்து  ஒரு  படகில்  இந்தியாவை நோக்கி எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பிரயாணம் குளிர்காற்றுடன் கூடிய த்ரில்லுடன் ஆரம்பித்தது. எங்கள் படகில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் இருந்தன. குழந்தைகளும் பெரியவர்களுமாக பதினைந்து பேர் அளவில் இருந்தோம்.

அவ்வப்போது பெரியவர்கள் இந்த இரவு நேர விசா பெறாத பிரயாணத்தைப் பற்றி பதட்டமாக பேசியது என்னை ஒன்றும் பயமுறுத்தவில்லை. இப்படிப் போன சில படகுகளுக்கு ஏற்பட்ட கதிகளைப் பற்றி பேசினார்கள். படகு கவிழ்ந்து பத்துப் பேர் செத்துப் போனது, இரு நாட்டு கடற்படைகளின் துவக்குச் சூடுகள், இரவில் திசை புரியாமல் வேறெங்கோ சென்றுவிட்ட படகுகள் என கதைகள் விரிந்தன.

சற்று நேரத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக தலைமன்னார் கடற்கரை காணாமற் போனது. எல்லாத் திசையையும் எல்லா இடத்தையும் கருமை கலந்த கடலும் வானமும் நிரப்பிக் கொண்டன. அன்று ஒரு தேய்ந்த நிலவு இருந்திருக்க வேண்டும்.ஆனாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் பல இருள் உருவங்களே இருந்தன.

படகோட்டி பல எச்சரிக்கைகள் கொடுத்தவாறே வந்தான்.
"சிகரெட் பத்திராதிங்க. சின்ன வெளிச்சம் கூட கடல்ல எவ்வளவு தூரம் இருந்து பார்த்தாலும் தெரியும். நேவி பார்த்தால் அவ்வளவுதான்!" என்றான்.

மணித்தியாலங்களில் நீண்ட அப்பிரயாணத்தில் தூரத்தில் ஒரு நேவிக் கப்பலைக் கண்டது உண்மைதான். கடல் தண்ணி சில நேரங்களில் உள்ளே வந்து நனைக்க மம்மி ஒரு டின்னில் கொண்டு வந்த முட்டை மாவினை இடைக்கிடையில் அரைத்தபடி பிரயாணித்தோம்.

என் பிறந்த திகதி 1978 டிசம்பர் 13 . எனக்கு கிட்டத்தட்ட நான்கு வயதாகும்போது இலங்கையில் இனப்பிரச்சனை போர் வடிவில் ஆரம்பித்தது. அது 1983  ஜூலை. கொழும்பில் கலவரம் ஏற்பட்டு அது நாடு முழுவதும் பற்றிக் கொண்ட ஆண்டு. அதனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு சாதாரண சமுதாய வாழ்க்கையை நான் கண்டதில்லை. ஆமி, போலீஸ், செக்கிங், சூடு, சாவு இவையில்லாமல் ஒரு சமுதாயம் இருக்காது என்றே எண்ணினேன். எல்லா நாட்டிலும் ஆமிக்காரன் ரோந்து வருவான்; செக் பண்ணுவான் என்றே என் மனதில் பதிந்திருந்தது. ஆனால் நிறையப் புத்தகங்களை வாசிக்க வாசிக்க அப்படி இல்லாமலும் நாடுகள் இருக்கலாம் எனப் புரிந்து கொண்டேன். அப்படி ஒரு இடமாக இந்தியாவைக் கேள்விப்பட்டதனால் அங்கு செல்வது இன்னும் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இடையில் ஒரு இடத்தில் ஆழம் குறைந்து படகு கரை தட்டியது.

"இதுதான் ராமர் அணை." என்றான் படகோட்டி. அங்கு தரை ஒன்றைக் காணவில்லை. ஆழம் குறைவான பிரதேசத்தை அப்படிச் சொன்னான். பின்பு அதை விட்டு தள்ளி பிரயாணித்தோம்.

பிரயாண நேரம் அதிகரிக்க அதிகரிக்க எல்லோரும் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். உண்மையில் படகோட்டி திசையை சற்று தவறத்தான் விட்டிருந்தான்.

"போய் விடுவோம், போய் விடுவோம்." என்று சொல்லிக் கொண்டே வந்தான். நாங்களும் நம்பிக்கையுடன்தான் இருந்தோம்.  (வேறு வழியும் இருக்கவில்லையே!). கடைசியில் கரையைக் கண்டு விட்டோம்.

"இந்தியா வந்திட்டுது! இந்தியாதான்."

சந்தோசமும் சந்தேகமும் கலந்த குரல்கள் . அப்போது விடிகாலை மூன்று மணியிருக்கும்.  மெது மெதுவாக கரையை நோக்கி பிரயாணித்தது படகு. கரையை நெருங்க நெருங்க கரையில் ஒரு மனிதன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"அவன் ஒரு இந்தியாக்காரன்தான்" என்றான் சாந்தன் கிசுகிசுப்பாக.

முதன்முதலாக படத்தில் பார்த்த மனிதர்களை நேரில் பார்ப்பது த்ரில்லாக இருந்தது. படகு எங்களை இறக்கிவிட்டு திருப்பிச் சென்றுவிட்டது.

நாங்கள் அவனை விசாரித்தோம். அவன் ஒரு மீனவன். அது தனுஷ்கோடியிலிருந்து ஆறு மைல் தள்ளி இருக்கும் இடமாம். படகுக்காரன் குழப்பத்திலோ அல்லது தன் பாதுகாப்புக்காக இங்கே இறக்கிவிட்டு போய்விட்டான். தான் தனுஷ்கோடிக்கு அழைத்துச்  செல்வதாக அம்மனிதன் சொன்னான்.

பின்னிரவில் நட்சத்திரங்களின் துணையுடன் தனுஷ்கோடியை நோக்கிய எங்களின் யாத்திரை தொடங்கியது.  ஆளாளுக்கு ஒவ்வொரு பொதியை தூக்கிக் கொண்டு ஆறு மைல் நடந்தோம். ஆனால் பொதிப் பாரமோ  பிரயாணக் களைப்போ அல்லது தூக்கக் கலக்கமோ என்னை ஒன்றும் செய்யவில்லை. என் கனவுலகத்தில் வந்து இறங்கி விட்டேன். அது போதும்...

நாங்கள் தனுஷ்கோடியை அடைந்தபோது பொல பொலவென விடிந்துவிட்டிருந்தது. துனுஷ்கோடி ஒரு பழைய சுனாமியில் அழிந்த ஊர் எனவும் சத்ரியன் படத்தில் விஜய காந்த் க்ளைமாக்சில்  சண்டையிடும் இடிந்த வீடுகள் இருக்கும் இடம் அதுதான் எனவும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவ்விடத்தை நான் காணவில்லை.

அங்கிருந்த    ஒரு கிணற்றடியில் நாங்கள் குளித்துவிட்டு புறப்பட்டோம். அப்போது மூத்த அண்ணா 7500 பணத்தையும் ஒரு கடிகாரத்தையும் மறந்து அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். பின் ஞாபகம் வந்து ஓடிப் போய் பார்த்த போது யாருக்கோ அன்று அதிஷ்டம் அடித்து விட்டிருந்தது. கவலையுடன் திரும்பிவந்தார். எங்களுடன் வந்த  ஞானேசர் குடும்பம் எங்களுக்கு அந்த  நிலையிலும் பணம் தந்து  உதவினார்கள்.  இதை என் அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அதனால்தான் அப்பணத்தின் அளவும் அச் சம்பவமும் என்னால் மறக்க முடியாமல் இருந்தது.

பின் ஒரு 'லாரியில்' (இந்தியன் லொறி என்பதால்!) ஏறிக் கொண்டோம். அந்த ஊர் போலீஸ்காரர்களின்  பாதுகாப்புடன் ராமேஸ்வரத்திற்கு பிரயாணப்பட்டு மண்டபம் முகாமை அடைந்தோம். அது இலங்கை அகதிகளை பெருமளவில் கொண்ட ஒரு அகதி முகாம்.  அதற்குள்  நாங்கள் நுழையும்போது வாசலில் காவலுக்கு நின்ற போலிஸ்காரரில் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

"தம்பி, எங்கேயிருந்து வரிங்க? யாழ்ப்பாணமா, கொழும்பா?"

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. கொழும்பிலிருந்து அகதிகள் படகில் வருவார்களா? சாதாரண மக்களுக்குத்தான் இலங்கையின் பிரதேச அமைவுகள், எங்கே மோதல்கள் நடக்கின்றன என்பது தெரியாது. ஒரு போலிஸ்காரருக்குமா? ஆனால் அது ஆச்சரியமில்லை என பிற்காலத்தில் மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தை பார்த்தபோது புரிந்தது. அதில் மாங்குளத்தில் மலை இருப்பது போல ஒரு காட்சி வரும். ஒரு நிஜ உலகின் இடத்தை சினிமாவில் சொல்லும்போது அதனைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமலா சொல்வார்கள்? ஒரு புத்தகத்தையோ அல்லது கூகுலையோ தட்டியிருந்தால் ஒரு வினாடியில் தெரிந்திருக்கும். போகப் போக இந்திய மக்களின் மனதில் இலங்கையின் வரைபடம் எப்படியிருந்தது எனப் புரிந்தபோது மனனக் கல்விக்கும் பொது அறிவுக்குமான வித்தியாசம் புரிந்தது. சில வேளை அந்தப் போலிஸ்காரர் செய்திகளில் அதிகம் அறியப்பட்ட இந்த இரு நகரங்களின் பெயர்களை மட்டும் அறிந்தவராக இருந்திருக்கலாம்.

அந்த முகாமில் எங்கள் விபரங்கள் பதியப்பட்டன. அங்குதான் முதன்முதலாக சாப்பாட்டிற்காக நான் ஒரு தட்டுடன் வரிசையில் நின்றேன். பருப்பும் சோறும் மட்டுமே. அகதி வாழ்க்கையின் முதலாவது எண்ணக்கரு விதைக்கப்பட்டது.. ஓ! நாங்கள் இப்போது அகதிகள் அல்லவா?

அந்த  நேரங்களில்  எனக்கு ஒரு கனவு மறுபடி மறுபடி வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. கடலுக்குள் நான் முழ்கி இருப்பேன். வெளியே வரலாம் என எத்தனிக்கும்போது யாரோ என்னை பின்னாலிருந்து தோளைப் பிடித்து அமுக்குவார்கள். நான் மூச்சுவிட முடியாமல் தவிப்பேன். முடிவில் ஒரு குண்டூசியால் முதுகில் குத்துவார்கள். நான் திடுக்கிட்டு விழிப்பதுடன் நிறைவடையும்.

அங்கு ஒரு நாள் இருந்திருப்போம். உடனடியாகவே நிலையான முகாம்களில் அனுமதிப்பதற்காக பேருந்துகள் தயாராகின. நாங்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுடன் ஏறியவுடன் அவை புறப்பட்டன. அவை ராமேஸ்வரத் தீவையும் இந்தியப் பெருநிலப்பரப்பையும்  இணைக்கும் பாம்பன் பாலத்தை கடந்து அவை சென்றன. ஆசியாவிலேயே மிகப் பெரிய பாலம் என்று சொன்னார்கள். சுமார் மூன்று கிலோமீட்டர் நீளமானது. அதற்கு சமாந்தரமாக ரயில்வே பாதைக்கான பாலமும் நீண்டு சென்றது பிரமிப்பை தந்தது.

இவ்வாறாக  இந்தியத்  தமிழ்   நாட்டுக்  கிராமங்களையும்  சில  நகரங்களையும்  கடந்து  எங்கள்  பஸ்  சென்றுகொண்டிருந்தது. ஓரிடத்தில்  பஸ்  நின்றபோது  யாரோ  சிலர்  சட  சடவென  ஏறினார்கள். அவர்கள்  இந்தியப்  பொதுமக்கள். எங்களிடமிருந்த  லக்ஸ்  போன்றவற்றிற்கு இலங்கைப்  பெறுமதியில்  அவற்றை  விட  மூன்று  நான்கு  மடங்கு  அதிக பணம்  அல்லது  கூடையில்  வைத்திருந்த  பழங்களைத்  தந்து  வாங்கிக்  கொண்டார்கள்.அவர்கள் ஏழைகள்தான். அவற்றைப்  பின் நல்ல  விலைக்கு  பணக்காரர்களுக்கு விற்பார்களாம். எனக்கு  அப்போதுதான்  நாம்  வேறு  ஒரு நாட்டில் இருக்கிறோம், அன்னியர்கள்  என்பது  உறைத்தது. பதினெட்டு கிலோமீட்டர்  தூரத்தில்  இவ்வளவு  வித்தியாசமா? பணப்  பெறுமதி, பொருட்களின்  விலைகள், கலாச்சாரம், மொழி  உச்சரிப்பு  என  எல்லாவற்றிலும்  பாக்கு  நீரிணை  வித்தியாசத்தை  ஏற்படுத்திவிட்டதே!

அவர்கள் தந்த  பழங்களை  ‘பேரிக்காய்’என்றார்கள். முதலில்  எனக்கு  அந்த  பேரே  பிடிக்கவில்லை.அது  அப்பிள்  பழம் போல  தோற்றமளித்து  .ஆனால் ருசியில்  வேறுமாதிரி  இருந்தது. எனக்கு ஏனோ  அந்தப்  பழம்  பிடிக்காமலே  போய்விட்டது.

கண்ணகியின்  தீயினால்  சுத்தமாக்கப்பட்டு  தமிழுக்கும்  தமிழ்  சினிமாவுக்கும்  பேர்   போன  மதுரை  மாநகருக்கு  அடுத்ததாக  அமைந்திருக்கும்  சிவகங்கைச்  சீமை மாவட்டத்தில்   நாங்கள்  குடியிருக்க  அனுமதிக்கப்பட்டோம். அந்த ஊரின்  பெயர்  முத்தனேந்தல்.அது  மதுரையிலிருந்து  முப்பத்தாறு  கிலோமீட்டர்  தூரத்திலும்  மானமதுரையிலிருந்து  பத்து   கிலோமீட்டர்  தூரத்திலும் இரண்டு நகரங்களையும்  இணைக்கும் பிஸியான  ஒரு  பெருந்தெருவுக்கு  அருகில்  அமைந்திருந்தது. ‘முத்தனேந்தல்’ என்ன ஒரு அழகான  பெயர். பொதுவாகவே  அரசப்பட்டி, அத்திப்பட்டி(!) என  தமிழக  கிராமப்  பெயர்கள்  எனக்குப்  பிடிக்கும்.

அக்கிராமத்தில்  பெருந்தெருவுக்கு  அண்மையில்  ஒரு பழமையான சத்திரம்  இருந்தது. அது  புனித  ஸ்தலங்களுக்கு  யாத்திரை செல்லும்  பக்தர்கள் தங்கிச்செல்வதற்காக  கட்டப்பட்டிருந்தது.அது  ஒரே  ஒரு  கட்டிடம்தான். ஆனால்  கட்டிடத்தின்  பரப்பே  …..அளவு  விஸ்தீரணம்  இருக்கும் . தமிழ்ப்படங்களில்  பழங்கால அல்லது  கிராமத்து வீடுகள் என்றால்  அதைப்  போல  ஒரு வீட்டைத்தான்  காடுவார்கள்.  அதன் கூரையை சற்றே இறங்கி நடுப்பகுதியில் இடைவெளி இருக்கும்.அதற்கு  நேரே தரையில் அதன்  அளவு  சதுரமாக  ஒரு பள்ளமான  இடமும் இருக்கும். அதனால்   மழையும்  வெயிலும்  காற்றும் தாராளமாக வீட்டினுள் நுழைந்தன.

எங்களுக்குத்  தேவையான சமையல்பொருட்கள்,உடைகள்  மற்றும்  இரு  கப்புக்  கோடுகள் போடப்பட்டிருக்கும். மோகன்  முதற்கொண்டு  காதற்  தோல்வியில்  சிக்குண்ட  தமிழ்  ஹீரோக்கள்  அதனைத்  தோளில் சுற்றிக்  கொண்டுதான்  இருமலுடன்  கூடிய  நல்ல  அழகான  சோகப்  பாடல்களை  எல்லாம்  பாடியிருக்கிறார்கள். மன்னிக்கவும். எனக்கு  தமிழகத்தை  எனக்குத்  தெரிந்த  தமிழ்ச்  சினிமா  மூலமாகத்தான்  அளவிட  முடிகிறது. ஏனெனில்  தமிழகத்தை  முதலில்  எமக்கு  அறிமுகப்படுத்தியது  அதுதானே!

அச்சத்திரத்தின்  நீண்ட  அறைகளும்  விறாந்தைகளும்  போர்வை  மற்றும்  சேலைச்  சுவர்களால்  தடுக்கப்பட்டு  சிறு  அறைகளாக  ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  வழங்கப்பட்டன. எட்டடிக்கு  எட்டடி  என்பார்கள். அங்கே  அவ்வளவுதான்  எங்கள்  மொத்த  வீடே. சமையலுக்கு  சத்திரத்தின்  பின்புற  முற்றம்  பயன்பட்டது.

எங்கள் முகாம் மற்றைய முகாம்களைப் போல  இறுக்கமான கட்டுப்பாடுகளைக்  கொண்டிருக்கவில்லை. ராமேஸ்வரம்  மண்டபம்  முகாமில்  வெளியே  செல்வதற்கு  கூட  கடினமான  பதிவு  நடைமுறைகள்  பின்பற்றப்படுகின்றன  எனக்  கேள்விப்பட்டோம். அப்பாடி! எங்களுக்கு  அப்படி  ஒன்றும்  இல்லை. எங்கள்  வீடு  போல அங்கு வசித்தோம். எங்கும்  போகலாம்.வரலாம்.

மாதாமாதம்  ‘சம்பளம்’ வழங்கப்பட்டன. ஒரு  குடும்பத்தில்  தலைவருக்கு  75 ரூபாவும்  அங்கத்தவர்களுக்கு  தலைக்கு  50 ரூபாவும்  தந்தார்கள். ரேசனில்  அகதிகளுக்கு  அரிசி  கிலோ  60 சதத்திற்கு  தந்தார்கள். வெளியில்  ஒரு  படி  7 ரூபா  விற்றதாக  ஞாபகம்.அதனால் நாங்கள்  அந்த  அரிசியை  வெளியில்  விற்று  கொஞ்ச  பணமும்  சம்பாதிக்க  முடிந்தது. அந்நேரத்தில்  இலங்கையில்  ஆகக்குறைந்த  பணமாக  50 சதமும்  25 சதமும்  கூட பாவித்தோம். ஆனால்  இந்தியாவில்  5 சதம்  10  சதத்திற்கு கூட பொருட்கள் இருத்தது ஆச்சரியமாக இருந்தது.

போன புதிதில் பப்பாவுடன் முத்தநேந்தலில் ஒரு தேநீர்க் கடையில் இட்லி சாப்பிட்டது மறக்க முடியாது. தட்டுக்கு  பதிலாக  வாழையிலை வைத்து  தண்ணீர் தெளித்தார்கள். அதற்கு  முன்பு  வாழையிலையில்  நான் சாப்பிட்டதில்லை. நான்  கிறிஸ்தவனாக  இருந்ததனால்  இலங்கையில் சைவர்களுக்கு  கிடைக்கும்  அந்த  வாய்ப்பும்  இல்லை. இட்லியை சுடச்சுடக் கொண்டு  வந்து வைத்தார்கள்.பூப்போல இட்லி  என ஏன் இந்திய எழுத்தாளர்கள்  எழுதுகிறார்கள்  என  அப்போது  கண்டுகொண்டேன். அத்துடன்  அந்த  மரக்கறிச்  சாம்பாரை மறக்கவே முடியாது.இட்லியையும் சாம்பாரையும் கலந்து குழைத்து சாப்பிட்டது இன்னும் சுவைக்கிறது.

முத்தனேந்தல் சற்றே பெரிய கிராமம். கல் வீடுகளும் மண் வீடுகளும் கலந்திருந்தன. அநேகமான அக்கிராம வீடுகளுக்கு முற்றம், வேலி இல்லாமல் இருந்தது ஆச்சரியாமாய் இருந்தது. கிராமத்திற்கு பின்புறமாக ரயில் பாதை செல்கிறது.  நெல் மற்றும் கரும்புத் தோட்டங்கள். அவற்றுக்கு காவலாக வயது போன கிழவர்கள். மிக ஆழமான பெரும் கிணறுகளிலிருந்து பம்புசெட் எனப்படும் ஜெனரேட்டர் மூலம் தொட்டிக்கு குழாய் ஊடாக தண்ணீர் பாயும். அதில்தான்'ஊருசனம்’குளிக்கும். அத்தண்ணீர் வயலுக்கு செல்லும்.இதெல்லாம் உங்களுக்கு விபரிக்கவே தேவையில்லை.எத்தனை படங்களில் பார்த்திருப்பீர்கள்.

ஊருக்கு வடக்காக பிரதான வீதியைக் கடந்து ஒரு குறுக்கு வீதியால் சென்றால் வைகை நதி வரும் என்றார்கள். தென்பொதிகை,வைகை நதி தினம் பாடும் தமிழ்ப் பாட்டை நேரிலேயே  கேட்டுவிடலாம் என்ற அவாவுடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினோம். ஆனால் ‘வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்’தண்ணீருக்குப் பதிலாக வெறும் காத்து மட்டும்’ ஆடிக் கொண்டிருந்தது. மணலாறு ஓடிச் சென்றதை பற்றி கேட்டால் ஒரு குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் தண்ணீர் புரண்டோடும் என்றார்கள். அங்கு ஒரு பாலமும் இருந்தது. அதன் உயரத்திற்கு வரும் என்றார்கள்.

போன புதிதில் பள்ளிக்கூடம் போகவில்லை.எனவே ‘எங்களூரில்’புதிதாகத் திறந்த வாடகைச் சைக்கிள் கடையில் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார்கள். முதல் நாள் முதலாளி எனக்கு வாடகைச் சைக்கிள் எடுப்பவர்களின் பெயர் விபரங்களைப் பதியவேண்டும் எவ்வளவு காசு வாங்க வேண்டும் என்று சொல்லித் தந்தார்.ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு ரூபாய் என்றார். சரியென்று தலையாட்டினேன்.மொத்தம் பதினைந்து சைக்கிள்கள் நின்றன.காலையில் சென்றதும் அவ்வளவு சைக்கிள்களையும் நன்றாகத் துடைக்க வேண்டும். பின்னேரம் மறுபடியும் பதினைந்தையும் துடைத்து கடைக்குள் அடுக்க வேண்டும். ஒரு நாலைந்து நாள் சென்றிருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் யாரோ ஒருத்தர் சைக்கிள் எடுத்துச் சென்றுவிட்டு ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்களுக்கு பின் ஒப்படைத்தார். நான் அவரிடம் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டேன். பின்னேரம் முதலாளி பதிந்து வைத்திருந்த நேரத்தைப் பார்த்துவிட்டு,

“என்ன இது?ஒண்ணேகால் மணித்தியாலத்திற்கு ஒண்ணேகால் ரூபா வாங்க வேணாமா? ஒரு ரூபா மட்டும் வாங்கியிருக்க?”என்றார்.அப்போதுதான் என் அப்பாவி மூளைக்கு அது உறைத்தது.நான் விழித்துக் கொண்டு நின்றேன்.

“அடப்பாவி, என் பொழைப்பிலே  மண் அள்ளிப் போட்டுட்டியே!”என்றார். அதை அவர் சீரியசாகச் சொன்னாரா அல்லது சிறுவன் என்று சீண்டினார என்று தெரியவில்லை. பின் எனக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அடுத்த நாளிலிருந்து அந்தக் கடைப் பக்கமே போகவில்லை.
புகழ் வார்த்தைகள்  கூட மறந்து போகும். ஆனால் எப்படித்தான் இகழப்பட்ட வார்த்தைகள் மனதில் அழியாமல் நிற்கின்றனவோ தெரியவில்லை.eppothu யாரும் ஏதும் சொல்வார்கள்.நாம் அவமானத்தில் சுருங்கிப் போகலாம் எனக் காத்திருக்கிறது.

பின் நான் ஒரு கிலோமீட்டர் தள்ளி மெயின் ரோட்டுக்கு சற்று உள்ளே அமைந்திருந்த ஒரு ஊரின் பாடசாலையில் சேர்ந்தேன். இலங்கையில் ஆறாம் ஆண்டு படித்ததால் இந்தியாவில் அது ஐந்தாம் வகுப்புத்தான் பொருத்தமானது என்று யாரோ கணக்குச் சொல்ல தலைமையாசிரியர் (அதிபருக்கு இப்படி ஒரு சொல்லை முதலில் கேட்கும் போது விநோதமாய் இருந்தது) என்னை அதிலேயே சேர்த்துவிட்டார்.

அது சற்றுப் பின் தங்கிய பாடசாலை அல்லது பள்ளி என்பதால் இரண்டு சிறு கட்டிடங்களே இருந்தன. ஒவ்வொரு நாளும் சத்துணவும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு முட்டையும் வழங்கப்பட்டன.கிராமத்துப் பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு வழியாக இருந்தது உண்மை. கிராமத்தவர்களையும் குறை சொல்ல முடியாது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். முதலில் வயிற்றுக்கு உணவு ஈய வேண்டும், பின்புதான் செவிக்குணவு என்பது தெரிந்ததுதானே? அடிப்படைத் தேவையை நிறைவேற்றாமல் அடுத்த கட்டத் தேவைகளுக்கு போவது முட்டாள்தனம். பசி காதை அடித்தால் எவனுக்கு  பாடம் கேட்கும்?

இங்கே ஒரு விஷயம்.இலங்கையில் இவ்வாறான நிலை இல்லை என்று அப்போது நினைத்திருந்தேன். சாப்பாட்டுக்காக பாடசாலை வருவது,சிறு வயதிலேயே படிப்பை விட்டு வேலைக்கு செல்வது என்பன இந்தியா போன்ற வறுமைப் பட்ட நாடுகளில்தான் நடக்கின்றன என எண்ணியிருந்தேன்.  ஏனெனில் அதுவரை நான் படித்த இரண்டு பாடசாலைகளிலும் அவ்வாறான நிலைமையைக் கண்டதில்லை. பிள்ளைகளின் படிப்பிற்காக எவ்வளவு பணத்தையும் உழைப்பையும் செலவிடத் தயாரான பெற்றோரை மட்டுமே பாத்திருந்தேன். உண்மையில் இலங்கையில் எழுத்தறிவு வீதம் ஆசிய நாடுகளிலேயே ஒப்பீட்டளவில் அதிகம் என்று படித்திருந்தேன். இருந்தாலும் பிற்காலத்தில் இலங்கையிலும் அவ்வாறான அவலம் உண்டு என அறிந்து கொண்டேன்.

இடைவேளை மணி தண்டவாளத்துண்டில் அடிக்கப்பட்டதும் ஓடிப்போய் தடுடன் வரிசையில் நிற்கையில் எனக்கு படங்களில் வருவது போல நமக்கும் நடக்கின்றதே என்று சிரிப்பாக இருக்கும். இலங்கையில் அந்த நேரம் இடைவேளையில் பிஸ்கட்,டீ போன்றவை வழங்கப்பட்டு அவற்றை சாப்பிட்டிருக்கிறேன்.ஆனால் இப்படி மதியச் சாப்பாட்டிற்காக நின்றதில்லை.

நாங்கள் ‘சிலோனிலிருந்து வந்த பசங்கள்’என்பதனால் எங்கள் மீதான பார்வை மற்ற இந்தியச் சிறுவர்களிடம் சற்று மாறுபட்டே இருந்தது. இலங்கைப் பற்றி அங்கு நடப்பவை பற்றி சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆர்வமாய்க் கேள்வி கேட்பார்கள். நாங்களும் எங்களுக்குத் தெரிந்தைக் கூறுவோம்.எங்களில் சில குறும்புச் சிறுவர்கள் நன்றாக அளப்பார்கள்.அதையும் அவர்கள் கண்களை விரித்துக் கேட்பதை பார்த்து சிரிப்பாக இருக்கும். ஒரு சிறுவன், “எங்கட நாட்டில நாங்கள் மாடி வீட்டில இருந்தம்.கார் வச்சிருந்தம். எலாத்தையும் விட்டிட்டு வந்திட்டம்.குண்டு வீச்சில எல்லாம் அழிந்திட்டுதோ தெரியேல்ல” என்று அளந்ததுஞாபம் இருக்கிறது.அவன் சொன்னது பொய் என்றாலும் இலங்கையில் பல பேர் அவ்வாறான செல்வங்களையும் உயிர்களையும் இழந்து வந்தார்கள் என்ற பொது ரீதியில் அது உண்மை என்பதனால் விட்டுவிட்டேன்.

நான் அங்கு படித்து இப்போது சுமார் இருபது வருடங்கள் ஆகியும் எங்கள் வகுப்பாசிரியரின் முகம் மறக்கவில்லை. ஒரு தடவி என்னைக் கூப்பிட்டு இலங்கையைப் பற்றிய விடயங்களைக் கேட்டார்.இன்னொரு தடவை ஒரு காகிதத்தில் எவ்வாறு பலவிதமான உருவங்கள் செய்வது என படித்துக்கொண்டிருந்தோம். நான் இலங்கையில் ஒரே ஒரு உருவம் மட்டுமே எவ்வாறு செய்வதென நன்றாக கற்றிருந்தேன். அது படகு செய்வது. அதனை நான் என் நண்பர்களுக்கு செய்து காட்டியதும் அவர்கள் அதனை உடனடியாக ஆசிரியரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். அவர் என்னைக் கூப்பிட்டு அதனை எப்படி செய்வது என மற்றப் பிள்ளைகளுக்கு செய்து காட்டச் சொன்னார்.

அதுவரை வாழ்க்கையில் மேடையில்  பேசியதில்லை. ஒரு முப்பத்தைந்து பேருக்கு முன்னால் ஒரு ஆசிரியர் போல அதனை செய்து காட்டியது எனக்கே என்னில் பெருமையை ஏற்படுத்தியது. அதற்கு ஆசிரியர் மற்றவர்களை கைதட்ட வேறு சொன்னார்.நிச்சயமாக அதுதான் நான் வாங்கிய முதல் கைதட்டு என்று நினைக்கிறேன். சிறுவயதில் நமக்கு மற்றவர்களால் கிடைக்கும் பாராட்டும் அவமானமும் நமது எதிர்கால நடத்தைகளில் செலவாக்கைச் செலுத்தும் என்பதை சைக்கிள் கடையிலும் வகுப்பறையிலும் கற்றுக்கொண்டேன்.

அங்கே வகுப்பறையில் ஆசிரியருக்கு மட்டுமே மேசையும் கதிரையும் இருந்தன. மாணவர்கள் தரையில்தான் அமர்ந்து படித்தார்கள். முதலில் தரையில் அமர்வதா என கூச்சமாய் இருந்தது. ஆனால் போகப் போக அது தெரியவில்லை. அங்கு ஆசிரியரின் கேள்விக்கு பதில் சொல்ல எழும்பும்போதும் பயிற்சிகளைத் திருத்துவதற்காக அவர் அருகில் செல்லும்போதும் மாணவர்கள் கைகளைக் கட்டிக் கொள்வார்கள். அதாவது ஆசிரியருக்கு அருகில் நிற்கும் நேரமெல்லாம் கை கட்டிக் கொண்டுதான் நிற்பார்கள். இலங்கையில் அவ்வாறில்லை. முதலில் எல்லோரும் கை கட்டும்போது நாமும் கை கட்டவேண்டும் என்று செய்தேன். காலம் போகப் போக ஆசிரியர் அருகில் சென்றாலே கைகள் தானாக கட்டிக் கொள்ள ஆரம்பித்தன.

அங்கு அனேகமாக மனனக் கல்வியே பிரதானமாக இருந்தது. அடுத்த வருடம் ஆறாம் வகுப்புக்கு சென்றபோது நிறைய விடயங்களை பரிட்சைக்காக மனனம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு இயந்திரம் போல எல்லா விடயங்களையும் மனனம் செய்து ஆசிரியரிடமும் பரிட்சைத்தாளிடமும் 'ஒப்பித்தோம்'. அதில் பரீட்சைக்காக பக்கம் பக்கமாக பாடமாக்கிய விடயங்களில் 'நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்' அப்படியே என் மனதில் நிற்கின்றன.

மனனக் கல்வியின் சில நன்மைகளின் ஒன்றாக அதிக விடயங்களை குறைந்த நேரத்தில் உள்வாங்கிக் கொள்ளுதல் என்பதை எடுத்துக் கொண்டாலும் அவற்றை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகம்தான்.

என்னுடன் படிக்கும் மாணவர்கள் "நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்...'நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்'..'நேருவின் பஞ்ச சீலக் கொள்கைகள்'...என படங்களில் வருவதுபோல அங்குமிங்கும் உலாவியபடி இழுத்து இழுத்து மனனம் செய்வது சிரிப்பாக இருக்கும். ஆனால் நானும் போகப் போக அவர்கள் போலவே மாறிவிட்டேன்.

அங்கு
இங்கு ஒரு விஷயம் சூழல் ஒரு மனிதனின் பழக்க வழக்கங்கள், மொழிநடை, எண்ணப்போக்கு என்பனவற்றில் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தும் என்பதை எனக்கு இந்த இந்தியப் பிரயாணம் கற்றுத் தந்தது.

போன புதிதில் ஊரில் இருந்த ஒரு பலசரக்கு கடைக்கு போனேன்.
"கச்சான் அல்வா தாங்க" என்றேன்.
"கச்சான் அல்வாவா?" என்றார் கடைக்காரர் ரிப்பீட்டாக.
"ஓம்! கச்சான் அல்வா"
"ஓம் கச்சான் அல்வாவா?"மறுபடியும் ரிப்பீட் பண்ணினார்.
அவருக்கு 'ஓம்' என்பதற்கு எங்கள் தமிழில் 'ஆம்' எனத் தெரிந்திருக்கவில்லை. 'கச்சான்' என்பதும் தெரியவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்ச் சினிமா மூலம் தமிழ்நாட்டு பேச்சு வழக்கு பரீட்சயமாய் இருந்தது. புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்தியர்களுக்கு அது முடியவில்லை.
"எதுன்னு காமி!" என்றார்.
எனக்கு அவர் 'காமி' என்று சொன்னது 'காட்டு' என்பதைத்தான் என்று உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவரது கைச் சைகை மூலம் புரிந்து கொண்டு வரிசையாய் இருந்த போத்தல்களில் ஒன்றைக்
 காட்டினேன்.
"ஓ! கடலை  அல்வாவா?" என்றார் கடைக்காரர் சிரிப்புடன்.
ஆரம்பத்தில் அவர்கள் பேச்சைக் கேட்டு நாங்களும் எங்களது  பேச்சைக் கேட்டு அவர்களும் சிரித்துக் கொள்வோம்.ஆனால் போகப் போக அவர்களின் பேச்சு வழக்கு மிக நன்றாகப் புரிந்ததுடன் என் பேச்சும் அவர்களது போலவே மாறிவிட்டது.

அங்கு சென்ற 90 காலப் பகுதியில்தான் தமிழில் மறு சீரமைப்பு எழுத்துக்கள் அறிமுகமாகின. னை, லை, ளை போன்ற புது எழுத்து வடிவங்கள் காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றை எமது வகுப்பாசிரியர் அறிமுகபடுத்தி  கற்பித்தார். 
    எங்கள் வகுப்பாசிரியை பாடசாலைக்கு சற்றுத் தள்ளி ஒரு கல்வீட்டில் குடியிருந்தார். ஏனைய குடிசை வீடுகளுடன் ஒப்பிடுகையில் அவர் வசதியானவர்தான். 
ஒரு விடுமுறைநாளில் நாங்கள் அவர் வீட்டிற்கு போயிருந்தோம். அப்போதுதான் வீட்டு விறாந்தையில் மாட்டியிருந்த போட்டோக்களில் அவரது கணவரைப் பார்த்தோம். அவர் ஒரு இந்தியப் படை ராணுவ வீரராம். லீவுக்குத்தான் வருவாராம். என் மனதில் அப்போது தவிர்க்க முடியாமல் தமிழ் சினிமாவில் காஷ்மீர் எல்லையிலிருந்து ஊர் திரும்பும் இர்ரானு வீரரின் காட்சிதான் விரிந்தது. என்னவோ தெரியவில்லை இவ்வளவு காலமாகியும் அந்த ஆசிரியரின் சிரித்த முகம் இன்றும் மனதில் மறையாமல் நிற்கிறது. 
என் பாடசாலையில் காலையில் இறை வணக்கம் முடிந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவார்கள். திங்கட்கிழமை காலையில் கொடியேற்றி தேசிய கீதம் பாடுவார்கள். "ஜன கண அதி நாயக ஜெயகே பாரத பாக்ய விதாதா "என்று அக்கீதம் இன்னும்   மனதில் நிற்கிறது.  பொதுவாக இனிமையான பாடல்கள் என் மனதில் வரிக்குவரி பதிந்து விடுவது உண்மை. வரிசையில் நின்று மற்ற மாணவர்கள் பாடும்போது அவர்களுக்கு தேசிய உணர்ச்சி ஏற்பட்டதோ இல்லையோ எனக்கு நாமேன் இந்தப்பாட்டை பாடுகிறோம் என்றிருக்கும்.  நாங்கள் வேறு நாடல்லவா?

பொதுவாகவே இந்தியர்கள் தேசப் பற்றுமிக்கவர்கள். அவர்களை உசுப்பேற்றும் விடயங்களில் இதுவும் ஒன்று. பாரதமாதா, தேசியக்கொடி, தேசியகீதம் என்பவற்றிற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையே வேறு. ஆனால் எனக்கு இவையெல்லாம் மிக சாதாரண விடயங்களாக தோன்றின. ஏனெனில் எனக்கு இலங்கைத் தேசிய கீதம், கொடி போன்றவையே சாதாரண விடயங்களாக தோன்றுகையில் இவை எம்மாத்திரம்?
ஒரு தமிழ் 'ஆசான்' எங்களுக்கு தமிழ் கற்பித்தது ஞாபகம் உள்ளது. நாங்கள் அவரை 'ஐயா' என்றுதான் அழைப்போம். அவர் ஒருநாள் பாரதிதாசன் கவிதை கற்பித்தார்.
'தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...'

ஆஹா...எப்படி பாரதிதாசன் ரசித்து எழுதி இருக்கிறார்,  அந்தத் தமிழின்பத் தமிழ்...எவ்வளவு அழகான சொற்றொடர்" என்றெல்லாம் அவர் பாரதிதாசனை ரசித்து ரசித்து கற்பித்ததை நான் ரசித்தேன். ஆனால் அப்போதே எனக்கு தமிழைப் பற்றியும் நாட்டுப்  பற்றைப் பற்றியும் சில சந்தேகங்கள் எழுந்தன. அவற்றை பின்னாளில் பார்க்கலாம்.

நான் பாடசாலையில்  சேர்ந்த  பிறகு  மணிகண்டன் எனும் நண்பன் கிடைத்தான். அவன் தந்தை முத்தநேந்தலில் பலசரக்கு கடை வைத்திருந்தார். மாலையில் மணிகண்டன் தன் தந்தைக்கு உதவியாக பொட்டலம் கட்டுவான். அதாவது கடையில் வேலை பார்ப்பான். நானும் சில நாட்களில் நுழைந்துவிடுவேன். அரிசி, சீனி, மா சுருள் சுற்றிக் கொடுப்பதே பெரிய கலை போல பெருமிதமாக இருக்கும். கல்லாவில் அவனது அப்பா காசை வாங்கிக் கொள்வார். மாலை பாடசாலை முடிந்ததும் ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை சில நேரங்களில்  கடையில் நிற்க வேண்டி வரும்.அப்படி நின்றால் எவ்வளவு கூலி தெரியுமா? ஒரு பன்னும் ஒரு பட்டாணி கடலைப் பையும்! அவற்றை சந்தோசமாக வீட்டுக்கு கொண்டு போவேன்.

1991. வாழ்வில் இன்னொரு மறக்க முடியாத ஆண்டு. மே மாதம் 21 ஆம்  திகதி காலையில் நான் எழுந்து வீதிக்கு வந்தபோது முத்தனேந்தல் சந்தியின் கடைகள் யாவும் பூட்டப்பட்டிருந்தன. நடமாடிய மனிதர்களின் கண்களில் கலவரமும் கோபமும் கலந்து தெரிந்தன. சூழல் அசாதாரணமாய் இருந்தது. வீதியில் நின்ற ஒருவர் "தம்பி, உள்ளே போங்க, ரோட்ல நிற்க வேண்டாம்!" என்றார். இலங்கையில் இம்மாதிரியான தருணங்களில் பெரியோர்களின் சொற்கேட்பது அவசியம் என்பது அனுபவத்தில் உணர்ந்திருந்ததனால் மறுபடி சத்திரத்திற்கு உள் நுழைந்தேன். பின்புதான் தெரிந்தது. முதல் நாள் இரவு 10 :10 மணியளவில் இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று...

ராஜீவ் காந்தி கொலை இந்தியா முழூவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அச்சிறு கிராமத்தில் நிலவிய சூழலே தெளிவாக காட்டியது. ரோட்டின் குறுக்கே மரத்துண்டுகள் போடப்பட்டு போக்குவரத்தை சிலர் தடை செய்தார்கள். தூரப்பிரயாணம் செய்து வந்த சில வாகனங்கள் எங்கே திரும்பி போவது எனத் தெரியாமல் அங்கேயே ரோட்டோரமாக நின்று காத்திருந்தன. ' PRESS' என்று பொய்யாக காகிதம் ஒன்றை முன் கண்ணாடியில்  ஒட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சிலர் 'விசாரணை' செய்து கொண்டிருந்தார்கள். போலீசார் 'இதெல்லாம் சகஜம்' அல்லது நியாயம்தானே என்பது போல வாளாவிருந்ததையும் எங்கள் சத்திரத்து வாளாகச் சுவர் அருகில் நின்றுகொண்டு காணமுடிந்தது.

யாரோ சத்திரத்தின் மேல் கல் எறிந்தார்கள். இந்தியர்கள் கோபம் வந்ததால் உள்ளே நுழைந்து அரிவாளால் வெட்டினாலும் வெட்டுவார்கள் என்று யாரோ கதையைப் பரப்ப ஒரு நடுக்கம் சத்திரத்தினுள் பரவியது. போலிஸ்காரர்கள் இருவர் முதன் முறையாக காவலுக்கு போடப்பட்டார்கள்.

நாங்கள் அங்கு வந்து ஒரு வருடமாகியிருந்ததனால் ஊராருக்கும் எங்களுக்கும் ஒரு அந்நியோன்யமான பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதனால் எங்களுக்கு பயந்ததுபோல ஒன்றும் நிகழவில்லை. தமிழகத்தின் வேறு சில இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகக் கேள்வி.
ஒரே இரவில் எங்களுக்கும் இந்தியர்களுக்குமான உறவு தலை கீழாக மாறிப்போனது உண்மைதான். எவ்வளவுதான் இருந்தாலும் அவர்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவரை அவர்களது நாட்டிலேயே வைத்து நாங்கள் கொடூரமாக கொன்றுவிட்டோம் என்ற கோபம் பின்னாளிலான  உறவின்போது தெரிந்தது. பாடசாலையில் ஒரு இந்தியச் சிறுவன் என்னிடம் "எங்க உப்பைச் சாப்பிட்டுவிட்டு எங்களுக்கே துரோகம் பண்ணிட்டீங்களேடா" என்று ஒரு தடவை சொன்னான். என் அம்மா இந்தியா வீடுகளுக்கு மாவரைக்க செல்லும்போது "ஏனம்மா எங்க நாட்டுத் தலைவரை கொன்னீங்க?" என்று அப்போதுதான் கொலை செய்துவிட்டு வந்தவரைக் கேட்பதுபோல கேட்டார்களாம். என்ன பதில் சொல்வது?

ஆனால்  ராஜீவ்  படுகொலை என்பது இந்தியர், இலங்கையர் எல்லோருக்குமே ஒரு சுவாரசியமான விவாதப் பொருளாகிப் போனது உண்மை. அது ஒரு த்ரில்லான  க்ரைம் ஸ்டோரி. நாவல்களை விட விஞ்சும் அளவில் இருந்தது. எவ்வளவோ பேர் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் இறந்து போகிறார்கள். ஆனால் அம்மரணங்கள் நம்மைப் பாதிப்பதில்லை. ஆனால் இம்மாதிரியான கொலைகள், கொலையாளிகளைக் கண்டுபிடித்தல் என்பவை சுவாரசியம்தான்.

இங்கு ஒரு விடயம். ராஜீவ் என்கிற தனிமனிதனுக்கும் தனு என்கின்ற தனி  மனுஷிக்கும் எவ்வித விரோதமுமில்லை. ஆனால் தாங்கள் சார்ந்திருந்த கொள்கை பற்றுக் காரணமாக ஒருவர் அடுத்தவரைக் கொல்லும் அளவுக்குக் கூட செல்லத் தயாராய் இருந்தார்கள். அத்துடன் இவ்விருவரின் செயற்பாடுகளால் இவர்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத பல பேர் இறந்து கூடப் போயிருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் கொள்கைப் பற்றுக்கள் தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத சிறப்பு ராஜீவ் காந்திக்கு உண்டு. அவரது கொலைச் சம்பவம் ஒவ்வொரு கட்டத்திலும் படம் பிடிக்கப்பட்டு நமக்கு கிடைத்திருக்கிறது. கொலையாளிகள்  அவர் வரும் வரை காத்திருப்பதும் நெருங்குவதும் வெடிப்பது  அவர் இறந்து கிடப்பதுமான காட்சிகள் போட்டோக்களாக  கிடைத்திருக்கின்றன . அந்தப் படங்களையும் ராஜீவ் படுகொலை என்ற சொற்களையும் அடுத்து வந்த மாதங்களில் பத்திரிகைகளிலும் டிவியிலும் பார்த்து பார்த்து அலுத்தே போய்விட்டது. மோகனதாஸ் காந்திக்கு ஒரு கோட்சே போல ராஜீவ் காந்திக்கு ஒற்றைக்கண் சிவராசன். ஒற்றைக் கண் என்பது காரணப் பெயர்தான் என்றாலும் தமிழ்ச் சினிமா வில்லன்கள் பெயர் போல இருந்தது.

இந்த தற்கொலைப் படைப் பற்றி அதிகம் என்னை சிந்திக்க வைத்தது ராஜீவ் கொலைதான். எப்படித்தான் தாங்கள் சாகப் போகிறோம் என்று தெரிந்தே வந்து வெடிக்கிறார்களோ என்று வெகு ஆச்சரியமாய் இருக்கும். அவனவன் தன் உயிரைப் பாதுகாக்க அடுத்தவன் உயிரை எடுக்கும் உலகத்தில் அடுத்தவனுக்காக அல்லது கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய மனிதர்கள் இருப்பது என்பது அபூர்வம்தான். இவர்கள் தங்கள் சாவிற்காக புறப்படும்போது எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள்?இப்படையில் சேர்ந்தவர்களது உறவினர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

படுகொலைக்கும் கொலைக்கும் என்ன வித்தியாசம்? சாதாரண மனிதனின் அல்லது எண்ணிக்கை குறைவான மரணங்களை கொலை என்பார்கள். பிரபல்யமானவர்களினதும் அதிக எண்ணிக்கையிலான மரணங்களையும் படுகொலை என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஒருவனது உயிரை இன்னொருவன் எடுப்பது என்பதே எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அதில் சாதாரணன், பிரல்யமானவன் என்று பிரிப்பது எங்ஙனம் தகும்? அது எல்லா மனிதர்களும் சமம் என்ற மனித உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரானது. எல்லோருக்கும் தெரிந்தவன்,அதிக எண்ணிக்கையினரால் மதிக்கப்படுபவன் என்பதால் மட்டும் அவனது உயிர் ஏனையவர்களின் உயிரை விட உயர்ந்ததாகிவிடாது.

நான் தீவிரமான வாகன விபத்துக்களை இந்தியாவில்தான் பார்த்தேன். எங்கள் சத்திரத்திலிருந்து அரைக் கிலோமீட்டர் தூரத்தில் இரவில் ஒரு கார் வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த மரமொன்றுடன் மோதி தலை கீழாகி இருந்தது. விடியற்காலை நான் அங்கு சென்றபோது காரினுள்ளே ரத்தம் சிந்தியிருந்ததைக் காணமுடிந்தது. பின்னால் வேகமாக வந்த லாரிக்காரன் இடித்துவிட்டுப் போயிருப்பான் என்று சொன்னார்கள். அவ்வளவு மனித ரத்தத்தை ஒரே இடத்தில் பார்த்தது அப்போதுதான். ஒரு குடும்பத்தில் இருவர் பலியாகி ஒருவர் காயம் என்றார்கள். நமக்கு அது செய்தி. அக்குடும்பத்தினருக்கு அது என்றென்றும் மறக்க முடியாத வடு.

மற்றது ஒரு நாள் காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் ஒரு மணல் லாரி சரிந்திருந்தது. மணலை லாரியில் ஏற்றிவிட்டு அதன் மேல் அமர்ந்து வந்த கூலிக்காரர்கள் மணலோடும் உயிரோடும் சமாதியானார்கள். இதுவும்  இரவிலேயே நடந்ததினால் தீயணைப்புப்படை வரத் தாமதமாகியது. விடியற்காலை அவர்கள் வந்தபோது எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு உடலாக மணலுக்குள்ளிருந்து தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த உடலுக்கு காயம் படக் கூடாது என கவனமாக தோண்டினார்கள். அப்படியும் காயம்பட்டு ஒருவர் தலையிலிருந்து வழிந்த இரத்தத்தை பார்த்தேன். அதன் டிரைவரும் ஊர்ச்சனம் வந்தால் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்திருந்ததனால் யாருக்கும் சொல்லாமலே ஓடிவிட்டான். என்ன கொடுமை பாருங்கள். அந்த லாரியில் அத்தனை பேரும் மடிந்ததற்கு நம் சமுதாயமும் காரணம் என்றால் நம்பமுடிகிறதா? அதுதான் உண்மை. மக்கள் அடிக்க மாட்டார்கள் என்றால் அவன் பக்கத்து வீடுகளிலிருந்த யாரையாவது உதவிக்கு அழைத்திருப்பான். தக்க நேரத்தில் உதவி கிடைத்து ஓரிருவராவது பிழைத்திருப்பர்கள்.

ஒரு விபத்தில் யார் மேல் தவறு எனத் தெரியாமலே அதன் டிரைவர்மீது உடனடியாகப் பழிபோடுவதும் அவனை அடிப்பதும் எவ்வளவு பெரிய தவறு. டிரைவரே தவறு செய்திருந்தாலும் அதனைத் தண்டிப்பதற்கு மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பின் போலீஸும் சட்டமும் எதற்கு? மனிதனுக்கு இன்னொரு மனிதனை அடிப்பதில் அதாவது வன்முறையில் ஈடுபடுவதில் ஒரு குருர திருப்தி இருக்கிறது. எல்லா நேரமும் அவன் அந்த ஆசையை தீர்க்க முடியாது. எனவே இப்படியான நேரங்களில் 'தர்ம அடி' என்ற பெயரில் அதனைத் தீர்த்துக் கொள்கிறான். தமிழ்நாட்டில் மட்டுமே இந்த 'தர்ம அடி' என்ற பதம் பாவிக்கப்படுவது வினோதம்தான்.

முத்தனேன்தலில் நான்தான் விடியற்காலையில் பால் வாங்கி வரச் செல்வேன். ஒரு செம்புடன் வீடுகளுக்குச் சென்று பால் கறந்துவிட்டார்களா எனக் கேட்டு வாங்கிவருவேன். கன்றுக் குட்டியைக் கட்டி வைத்துவிட்டு தாயிடம் பால் கறப்பதை பார்க்கும்போது கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் இறைச்சியையே சாப்பிடுகின்ற எனக்கு அது பெரிதாக உறுத்தவில்லை என்பதுதான் உண்மை. நாங்கள் சைவம், நீங்கள் அசைவம் என்று யாரும் சொல்லும்போது அது தவறில்லை என்றேபட்டது. புலி மானை அடித்துச் சாப்பிடுகிறது. மான் புல்லைக் கடித்துச் சாப்பிடுகிறது. மனிதன் விலங்கு,தாவர இரண்டையும் சாப்பிடுகிறான். அவன் அனைத்தும் உண்ணி. மச்0சம் சாப்பிடுவது தவறென்றால் புலியும் இருக்காது. மானும் இருக்காது.இயற்கை சமநிலை குழம்பிவிடும் என வாசித்திருந்தேன். நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது இயற்கையின் நியதி. இந்த சூழலில் வாழும் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழ்கின்றன. 

அவ்வாறாக பாலுக்கு செல்லும்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பெண்கள் போட்ட மற்றும் போட்டுக் கொண்டிருக்கின்ற கோலங்களை பார்த்து ரசித்தவாறே செல்வேன். செப்புப் பாத்திரங்களை துலக்கி பளபளப்பாக அடுக்கி வைப்பதில் தமிழ் நாட்டுப் பெண்களை மிஞ்ச முடியாது.

அங்கு நானும் அம்மாவும் காட்டுக்கு விறகு எடுக்கப் போவோம். காடு என்றால் அவை வெறும் முள்ளு மரங்கள்தான். 'பொற்காலம்' படத்தில் முரளி, மீனா விறகு எடுக்கும் அதே காடு.அது விறகு அல்ல. சுள்ளி என்பார்கள். அதில் நீட்டு நீட்டாய் முள்ளு இருக்கும்.கால்களில் அட்டை ஊரும். தட்டி விட்டால் எதுவுமே தெரியாதவர்போல சுருண்டுகொள்ளும். சுள்ளிகளை முறித்து அல்லது பொறுக்கிக் கொண்டு வீடு திரும்பும்போது குறைந்தபட்சம் இரண்டு முள்ளாவது குத்தியிருக்கும்.  

அங்கு வரும் தினபத்திரிகைகளை விடாமல் படித்துவிடுவேன். ஒரு பக்கத்தில் கவிதைகள் வரும். அப்போது எனக்கு கவிதைகள் வாசிப்பது பிடிக்கும். ஹைக்கூ போன்று வரும் கவிதைகளை நானும் எழுத முயற்சிப்பேன். ஒரு தடவி உண்ணாவிரதம் என்ற தலைப்பில்  எழுதினேன்.

"அவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உணவு வேண்டுமாம்...! "

 நான் அதுவரைக்கும் டிவி பார்த்ததில்லை. அதாவது டிவி திரையில் சினிமா பார்த்திருக்கிறேனே தவிர டிவி ஒளிபரப்பு நிலையங்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்ததில்லை. எங்கள் சத்திரத்திற்கு பக்கத்தில் ஒரு சிறு வீட்டில் போலீஸ் ஸ்டேசன் இயங்கியது. அதன் ஒரு அறையின் வெளிப்புற கம்பியில்லா ஜன்னலுக்கு அருகில் கிராமப் பஞ்சாயத்தார் பொது டிவி ஒன்றை வைத்திருந்தார்கள். மக்கள் இரவில் வெளியே மணலில் அமர்ந்து பார்ப்பார்கள். மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும். இரவு பத்து மணிவரை பார்க்கலாம். சிறுவர்கள் நாங்கள் ஆறு மணி என்றால் அங்கே தவறாமல் ஆஜராகிவிடுவோம். ஆனால் இப்போதுபோல் எக்கச்சக்கமான சானல்களில் எத்தனைப் பார்ப்பதென்ற குழப்பமில்லை.  டிவி ரிமோட் வசதியுமில்லை. நாங்கள் அங்கே பார்ப்பது தூரதர்ஷன்  சனல் மட்டும்தான். அதில் பகல் முழுவதும் ஹிந்தி நிகழ்ச்சிகளையும் ஆறு தொடக்கம் பத்து மணிவரை மட்டுமே உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளையும் (பொதிகை) ஒளிபரப்புவார்கள்.

பொதிகை நிகழ்ச்சிகள் அவ்வளவு சுவாரசியமானவை இல்லை என்றாலும் எதைப் போட்டாலும் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். பெரியவர்கள் செய்தி பார்த்துவிட்டு போவார்கள். வார நாட்களில் ஏழு மணிக்கு ' வயலும் வாழ்வும்' என்ற விவசாய நிகழ்ச்சி இருக்கும். அதன் டைட்டில் போட ஆரம்பித்ததும் அதுவரை பார்த்துக் கொண்டிருந்த எல்லா விவசாயப் பெருமக்களும் எழுந்து வீட்டைப் பார்க்கச் செல்வது சிரிப்பாக இருக்கும்.

ஆனால் 'ஞாயிறு மாலை' என்பது ஊருக்கு விசேடமான நல்ல நேரம். ஏனெனில் ஒவ்வொரு ஞாயிறு மாலை ஆறு மணிக்குத்தான் ஏதாவது ஒரு தமிழ் படம் ஒளிபரப்புவார்கள். டிவியில் தமிழ்ப்படம் என்பதே அப்போது அது ஒன்றுதான். அந்நேரத்திற்கு மணல் முற்றம் முழுவதும் ஹவுஸ்புல்லாகிவிடும்.  

எனக்கு அப்போது டிவியில் வரும் விளம்பரங்கள் பிடிக்கும். ஒரு பொருளுக்கான விளம்பரம் எப்படி உருவாக்கப்படவேண்டும் என்பதில் இந்தியர்கள் தேறியவர்கள்.இலங்கையில் ஒரு பால்மா விளம்பரம் என்றால் ஒரு அம்மா அந்தப் பால்மாவைக் கரைத்து தன் பிள்ளைகளுக்கு கொடுக்க அவர்கள் அதனைக் குடித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று தலையாட்டுவார்கள். உடனே ஒரு அசிரீரி குறிப்பிட்ட பால்மா சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என அறிவித்து முடிக்கும். 

ஆனால் இந்தியா விளம்பரங்கள் வித்தியாசமானவை. சொல்ல வேண்டிய விடயத்தை உடனே நேரடியாக கூறாமல் முதலில் அந்த விளம்பரத்தை எல்லோரும் கவனிக்கும் விதமாக  ஏதாவது ஒரு புதுமையான விடயம் காண்பிக்கப்படும். விளம்பர நேரத்தின் 75  வீதம் அதிலேயே கழிந்துவிட மீதி நேரத்தில் மட்டுமே பொருள் பற்றி பேசப்படும். அக்கவன ஈர்ப்பு காட்சிகள் சற்று  மிகைப்படுத்தலாக இருந்தாலும் அவை எல்லோர் மனதிலும் இலகுவாக பதிந்துவிடும். 

வழமையான அல்லது ஒழுங்கான ஆயிரம் விடயங்களைவிட மாறுபட்ட ஒரு சிறுவிடயம்  கவனத்தை ஈர்ப்பது இயல்பு. ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களில் ஒழுங்கு குலைந்த ஒரு புத்தகம் கவனத்தைக் கவரும்.  

இன்னும் ஒரு விதத்தில்  சொன்னால் நேரடியாக ஒரு விடயத்தை கூறுவதைவிட  சுற்றிவளைத்து பில்டப் பண்ணிக் கூறும்போது அதன் மதிப்பே தனிதான். உதாரணமாக பல சிறந்த விளம்பரங்களைக் கூறலாம். அக்காலத்தில் வந்த ஒரு விளம்பரத்தில் புயல் வீசி அடைமழை பெய்ய மக்கள் வெள்ளத்தில் அவதிப்படுவார்கள். அந்நேரத்தில் ஒருவர் ஒரு பைக்கில் அக்கடினமான இடங்களில் பிரயாணித்து மக்களைக் காப்பாற்றுவார். அதன் கடைசி காட்சி வரும்வரை  மக்களின் கவனம் வெள்ளம், மக்கள் காப்பாற்றப்படல் போன்ற கவன ஈர்ப்புக் காட்சிகளில் லயித்திருக்கும்.கடைசிக் காட்சியில்  அந்த பைக் என்ன வகை என்று காட்டப்பட  பின் அதற்கான விளம்பர வாசகத்துடன் முடிவடையும்.

ஒரு தடவை எங்களூரின் கரும்புத் தோட்டக்  காவலாளிக்  கிழவன்  இறந்துவிட்டார் எனக் கேள்விப்பட்டு அவர் வீட்டிற்கு சென்றோம். வீட்டிற்கு வெளியே தாரை தப்பட்டைகள் முழங்க ஓரிடத்தில் சனம் குவிந்திருந்தது. பரவாயில்லை, கிழவன் செல்வாக்கான ஆள்தான் போலிருக்கிறது என்று நினைத்து எட்டிப்பார்த்தால் சினிமாவில் திருவிழாக் காட்சிகளில் நான் பார்த்த கரகாட்டக் கோஷ்டி ஒன்று நடுவில் நின்று ஆடிக் கொண்டிருந்தது. அதில் அரைகுறை ஆடைகளில் அவ்வளவு பேருக்கு நடுவில் ஆடிய பெண்களைப் பார்த்து எனக்கே வெட்கமாய் இருந்தது. கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். கூலிக்கு மாரடிக்க வந்த கிழவிகள் எல்லாம் மனப்பாடமாய் இருந்த ஒப்பாரிப் பாடல்களை கூட்டமாக கட்டியணைத்து 'மூக்குச் சீறியவாறே' உரத்த குரலில் ஒப்பித்துக் கொண்டிருந்தார்கள்.  

இந்தக் 'கூலிக்கு மாரடித்த்கால்' என்பதை நான் முதலில் கேள்விப்பட்டபோது ஏனிப்படி செய்கிறார்கள், இறந்தவரின் சொந்தக்காரருக்கு துக்கம் என்றால் அழுகை வராதா என எண்ணிக் கொண்டேன். ஆனால் எல்லோருக்கும் தங்கள் துக்கங்களின்போது அழுகை வராது. ஆனால் அழாவிட்டால் துக்கம் மனதில் தங்கி அதனைக் கடுமையாக பாதித்துவிடும் என சொல்கிறார்கள். எப்படி நம் துன்பங்களை மற்றவர்களிடம் வாய் வார்த்தையாக கூறினால் ஒரு ஆறுதல் கிடைக்கிறதோ அதுபோல கண்ணீருடன் துக்கமும் கரைந்து வெளியேறிவிடும் என எண்ணுகிறேன். அத்துடன் சொந்தக்காரர்கள் அழாவிட்டால் பார்க்கிறவர்கள் இறந்தவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்?!

இன்னொரு விடயம் இந்தக் கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எப்படித்தான் யாரோ இறந்ததிற்கெல்லாம் அழுகை வருகிறது என்பதுதான். அழுகையை ஒரு தொழிலாக்கி காசு சம்பாதிக்கும் வினோதம் நம் கலாச்சாரத்திற்கு மட்டுமே உண்டு.

ஒருவன் செத்தபின் அவன் 'மகராசா' ஆகிவிடுவான். அவனைப் பற்றிக் குறையே கூறமாட்டார்கள். சாவதற்கு முதல் நாள்கூட அவனை இழிவாக கதைத்தவர்கள் இன்று 'உண்மையிலேயே அவர் ஒரு நல்ல மனுஷன். யாருடைய பொல்லாப்புக்கும் போகமாட்டார்' என உண்மையை அவிழ்த்து விட்டுக்  கொண்டு நிற்பார்கள். 

வீட்டிற்குள் நுழைந்தால் சனங்களுக்கு நடுவில் நடுநாயகமாக  ஒரு கதிரையில் ஒருவர் வீற்றிருந்தார்.  தலையில் அடிபட்டு கட்டுப் போட்டது போல உச்சந்தலையிலிருந்து நாடிவரை வெள்ளைத்துணி சுற்றப் பட்டிருந்து . இரு மூக்குத் துவாரங்களும் பஞ்சினால் அடைக்கப்பட்டிருந்தது.  அவர்தான் நேரம் வந்து 'காலம்'  விட்டவராம்.இலங்கை மற்றும் இந்திதயத் தமிலருக்கிடையில் இறுதிச் சடங்கில் கூட வித்தியாசங்கள் இருந்தன. தலையைச் சுற்றி துணி கட்டுவது பிணத்தை அமரவைக்கும்போது வாய் திறந்தபடி கட்சி அளிக்காமல் இருக்கத்தான் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கள் நாட்டில் மூக்கில் பஞ்சு வைத்து நான் பார்த்ததில்லை. ஏதாவது சுகாதாறன காரணங்களாக இருக்கலாம். பாடை என்ற சொல் தமிழ்நாட்டில்  மட்டுமே உண்டு. 

இந்தியாவில் இருந்தபோது சில பிரபலங்களை நேரில் பார்க்க முடிந்தது. ஒரு தடவை தேர்தல் சமயத்தில் நடிகர் பாண்டியன் ஒவ்வொரு ஊராக காரில் திமுகவிற்காக வோட்ட்டுக் கேட்டு வந்தார்.  எங்கள் ஊரில் வந்து நின்றதும் சனம் மொய்த்துக் கொண்டது. அவர் வேறு வழியில்லாமல் காரின் மேலே ஏறி நின்று பேசினார். மக்கள் திமுகவிற்கு வோட்டுப் போடா வேண்டும் என்றும் அதற்கு சம்மதிக்காவிட்டால் தான் அந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்றும் சொன்னார். நான் அவரை அருகில் நின்று பார்த்தேன் நல்ல நிறம். படத்தில் பார்த்ததை விட மிக அழகாக இருந்தார். உண்மையில் அங்கிருந்து போகமாட்டார் என்பதற்காகவே மக்கள் வோட்டுப் போட சம்மதிக்க மாட்ட்டார்கள் என்று நினைத்தேன். நடிகர்கள் மீதான ஈர்ப்பே தனிதான். 

நடிகர்களை நடிகர்களாக பார்ப்பதைவிட அவர்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களாகவே பார்க்கத் தோன்றுவதால் அவ்வாறான ஈர்ப்பு ஏற்படுகிறது என நினைக்கிறேன். அவர்களை திரையில் பிரம்மாண்டமாக பார்த்ததும் உளவியல் ரீதியாக அவர்கள் நம்மைவிட பெரியவர்கள் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி இருக்கலாம். இன்னும் வில்லன் நடிகர்களைவிட ஹீரோ மற்றும் காமெடி நடிகர்கள்மீது மக்கள் தனி அன்பு வைத்திருப்பதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அவர்கள் மக்களின் உளவியல் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். காமெடி நடிகர்கள் மக்களை சிரிக்க வைப்பதன் மூலம் கவலைகளை மறக்க வைக்கிறார்கள். மறுபக்கத்தில் சமுதாயத்தில் தங்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை சுயமாக தட்டிக் கேட்க முடியாமல் அதற்கு ஒரு 'மீட்பரை' எதிர்பார்க்கிறார்கள். அது நியத்தில் நிறைவேறாவிட்டாலும் சினிமாவில் அநியாயம் நடக்கும்போது வானத்திலிருந்து குதித்து வந்து தட்டிக் கேட்பதனால் அந்த ஆதங்கம் பூர்த்தியாகிறது. naam மற்றவர் மீதுள்ள கோபத்தை நேரடியாக காட்ட முடியாவிட்டால் கையில் கிடைக்கும் பொருட்கள்மீது காட்டுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

அடுத்து நான் பார்த்தது மிஸ்டர் கருணாநிதி. சந்தேகம் வேண்டாம். அவரேதான். டாக்டர், கலைஞர், தமிழர்களின் உடன்பிறப்பு, இப்படி எத்தனையோ பட்டங்களை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி அவர்கள்தான். சுதந்திரத்திற்கு பின்னரான தமிழகத்தின் பாதிக்கால சரித்திரம். தமிழக முதல்வர் என்றாலே எனக்கு அவர் முகம்தான் ஞாபகம் வரும். ஒன்றா இரண்டா ஐந்து தடவை அல்லவா முதல்வராக இருந்திருக்கிறார். எழுத்து வித்தகர். சிறு வயதில் அவரது அரச நாவல்கள் வாசித்திருக்கிறேன். இவருக்கும் வாலிக்கும் எங்கிருந்துதான் வார்த்தைகள் கிடைக்கின்றனவோ தெரியவில்லை. வாலியாவது  இருக்கிற வார்த்தைகளை வைத்து எதுகை மோனைகளில் விளையாடுவார். ஆனால் கலைஞர்  கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களுக்கேற்ப புதுப்புது  அழகுச் சொற்றொடர்களையே  உருவாகிவிடுவார். அவரைப் பற்றி பின்பு கட்டாயம் சொல்வேன்.

ஆனால் அது தேர்தல் நேரமல்ல. எதற்காகவோ எங்கள் ஊர் வழியாக வந்தார். அவர் அவ்வழியாக செல்லப்போகிறார் என காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது. வீதியின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நிறைந்திருந்தனர். நாங்கள் சிறுவர்கள் என்றதால் பெரியவர்கள் மறைத்துவிடுவார்கள் என்பதால் நீண்ட வரிசையின் தொடக்கத்தில் போய் நின்று கொண்டோம். படங்களில் வருவது போலவே ஏராளமான கார்கள் அணிவகுத்துச் செல்ல கடைசிக்கு முதலாவதில் அவர் வந்தார். எங்களைப்  பார்த்ததும் காருக்குள் இருந்தபடியே தன் வாழ்க்கையில் மிக அதிகமாக செய்த வேலையை மறுபடி ஒரு தடவை செய்தார். அதாவது கைகூப்பினார். முதலாவதாக நின்றபடியால் எங்களை மட்டுமே பார்த்து அவர் கை கூப்பியது போல பெருமையாக இருந்தது.

எனக்கு பிரயாணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒரு தடவை நாங்கள் வேளாங்கன்னிக் கோவிலுக்கு சென்றோம். ஒரு 'பல்லவன்' சொகுசு பஸ்ஸில் இரவில் பிரயாணித்ததாக ஞாபகம்.  அந்த டிரைவர் மிக வேகமாக ஓட்டிக் கொண்டிருந்ததால் அப்பா பயத்தில் திட்டிக் கொண்டே வந்தார்.

நாகூர் தாண்டி வேளாங்கண்ணி வந்து இறங்கினோம். கோவிலை அடைவதற்கு சற்று தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஒரு திருப்பத்தில் நாலைந்து பிச்சைக்காரர்கள் தட்டுக்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டோம். "அம்மா, தாயே, பிச்சை போடுங்கம்மா..!" என்று கோரசாக பாடிக் கொண்டிருக்க மாதா கோவிலில் ஏழைகளுக்கு தானம் செய்வது புண்ணியம் என்று இருந்த சில்லறைகளை பிரிந்தது போட்டோம். அப்புறம்தான் பார்த்தால் அங்கிருந்து கோவிலை அடையும் வரையான சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவ்வளவு பிச்சைக்காரர்களை ஒரே இடத்தில் நான் கண்டதேயில்லை. கோவிலை அடையும் வரை அவர்களின் "அம்மா, தாயே..!" வரவேற்பையும் " வாங்கம்மா, வாங்கம்மா, மலிவு, மலிவு...!" என்ற கடைக்காரர்களின் உபசரிப்பையும் கேட்டவாறே நடந்தோம்.  

வேளாங்கன்னிக் கோவில் பெரிதாகவும் அழகாகவும் காட்சி அளித்தது. ஆனால் அதைவிட  அழகான பெரிய கோவில்கள் வேறு இடங்களில் இருந்தாலும் இதற்கு மட்டும் என்ன ஸ்பெசல் என்று அப்போது யோசித்தேன். அதற்கு அந்த மாத கடலில் யாரையோ காப்பாற்றி ஏதோ புதுமை செய்ததாக ஒரு கதை சொன்னார்கள். அந்தக் கதை முக்கியமல்ல. எல்லாப் புகழ் பெற்ற கோவில்களுக்கும் பின்னால் ஒரு பக்தி பரவசமூட்டக் கூடிய ஏதாவது ஒரு கதை இருந்தே ஆகும். அதற்கு எந்த மதக் கோவில் என்ற பேதமில்லை. எனக்கென்ன ஆச்சரியம் என்றால் குறிப்பிட்ட ஒரு மதத்தை 'சேர்ந்த' ஒரு கடவுள் இன்னொரு மதத்தவரின் கனவில் வருவதில்லை அல்லது அவரைக் காப்பதில்லை. கடவுளுக்கே இப்படி ஒரு பேதமா?

கோவிலின் பின்பக்கம் 'வழக்கம் போல' புனிதக் கிணறு இருந்தது. பலர் தங்கள் செப்புக் காசுகளை வலை போட்டு மூடியிருந்த அதனுள் போட்டு செபித்தார்கள்.  அதன் நீரை பக்தியோடு பருகினார்கள்.

இவ்வாறான ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடவுளின் அருள் கூடுதலாக கிடைக்கும் என்று கிறிஸ்தவர்கள் நம்பும் பைபிளின் புதிய ஏற்பாட்டில் இல்லை. இது இந்து மதத்திலிருந்து எடுக்கப்பட்ட மக்களுக்கு விருப்பமான ஒரு மரபு. குறிப்பிட்ட இடத்திற்கு முஸ்லிம்களைப் போல யாத்திரை செய்து அதன் மண்ணைக் கொண்டு வருவதும் சைவர்களைப் போல சிலைகளைக் கும்பிடுவதும் கிறிஸ்தவத்தில் இல்லை. முஸ்லிம்களுக்கு மக்கா யாத்திரை ஐந்து புனிதக் கடைமைகளில் ஒன்று. சைவர்கள் கல்லுக்கு அபிஷேகம் செய்து அதற்கு சக்தியை அளித்து அதனை வணங்குகிறார்கள். அவர்களின் மதத்தை நான் நம்பாவிட்டாலும் அதில் ஒரு வாத நேர்மை இருக்கிறது. கத்தோலிக்கர்கள் சிலையை ஒரு நாபகார்த்தச் சின்னமாக பாவிக்கின்றோம் அல்லது கோவில் அழகுக்காக பாவிக்கின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அதனைத் தொட்டு வணங்குவதும் இந்து மதத்தினர் தேரில் வைத்து சுற்றுவது போல அதனை வைத்து 'திருச் சொரூப பவனி' செய்வதும் தவறு என்றே அப்போது எனக்கு பட்டது.

நான் போனது திருவிழா நேரத்தில் அல்ல. ஆனால் எங்கள் ஊர் பிரபல கோவில் திருவிழாக் கூட்டங்களை  விட அதிகமான மக்கள் நெரிசல் இருந்தது. நல்ல வேளை திருவிழா நேரத்தில் வரவில்லைஎன்று எண்ணிக் கொண்டேன். கோவிலுக்கு அருகில் 
ஒரு அரும்பொருட்காட்சியகம் இருந்தது.அதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய மாதாவுக்கு  செலுத்திய காணிக்கைகளை காட்சிக்கு 
வைத்திருந்தார்கள். சும்மா இல்லை. செப்பு, வெள்ளி, தங்கம் உட்பட அனைத்தும் இருந்தன. கால், கை எனத் தங்களுக்கு எந்த நன்மை கிடைத்ததோ அதன் அடையாளத்தில் தங்கத்தால் கூட 
செய்து அளித்திருந்தார்கள். நிறைய தங்கம் வெள்ளியிலான குட்டி வேளாங்கண்ணிக்  கோவில்களும் இருந்தன.     யார் எதற்காக அளித்தார்கள் என்ற விபரமும் கீழே எழுதப்பட்டிருந்தன.

எப்போதும் உருவங்களைவிட அருவங்களில் மனிதர்களுக்கு நம்பிக்கை அதிகம். சக மனிதனை நம்புவதைவிட கண் முன் படாத கடவுளை நம்புவது அவனுக்கு எளிதாக இருக்கிறது. சக மனிதன் ஏமாற்றுவதைப் பார்த்திருப்பதனால் அவனை முழுமையாக நம்ப முடியாதுதான். ஆனால் 'முன்னப்பின்ன' பார்த்திராத கடவுளை எப்படி இப்படி முழுமையாக நம்புகிறார்கள்? தான் கடவுளை வேண்டி அது நடந்துவிட்டால் அவரின் கருணையை போற்றிப் புகழ்ந்து கோவிலே கட்டுகிறான். காசை இறைத்து காணிக்கை செலுத்துகிறான். நடக்காவிட்டால் அது தன தலைவிதி என்று இருந்துவிடுகிறான். கடவுளை அதிகமாக திட்டுவதில்லை. பயம்! காலம் காலமாக ஆண்டான் அடிமை சமுதாய முறைமையில் வாழ்ந்து வந்த பரம்பரை அலகு அவனை அப்படி செய்யவைக்கிறது. இப்போது பெயர் சற்று மாறியிருக்கிறது. ஆண்டவன் அடிமை! என்னைப் பொறுத்தவரையில் முடிவே இல்லாத சொத்துக்களை வைத்துக் கொண்டு நாம் நோன்பிருந்து செபித்து தவமிருந்து கேட்டால் எதோ பார்த்து தரும் அல்லது கிள்ளித் தரும் கடவுளின் எந்தப் பெரிய வரத்தையும் விட சக மனிதன் தான் உழைத்து  தரும் ஒரு சோற்றுப் பருக்கை வானமளவு பெரியது என்பேன்.  
 அங்கு வேறு விசேடங்கள் என்றால் கடற்கரையில் உலாவிய ஒரு ரூபாய்க்கு நம்மை ராஜவாக்கும் குதிரைகாரர்களும் நம்முடன் போட்டோ எடுப்பதற்காகவே நாள் முழுக்க ஸ்டுடியோக்களில்  கால் கடுக்க நிற்கும் ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் அதாவது அவர்களின் ஓவியங்கள்!

பின்பு ஒரு தடவை எங்கள் சத்திரத்திற்கு உதயன் மாமா வந்தார். அவரும் அகதியாக கோயம்புத்தூரில் இருந்தார். அவர் திரும்பிச் செல்லும்போது நானும் அவருடன் வரப்போகிறேன் என்று சொல்லி அடம்பிடித்து அவருடன் கோயம்புத்தூருக்கு கிளம்பினேன். எங்களூரிலிருந்து அது ............கிலோமீட்டர் வரும். நீண்ட பிரயாணங்களில் கிடைக்கும் த்ரில்லே தனிதான். அந்நேரங்களில் நான் பஸ் சீட்டில் அமரமாட்டேன். டிரைவருக்குப் பின்னால் போய் நின்றுவிடுவேன். அவரது ஒவ்வொரு அசைவையும் அதற்கேற்ற பஸ்சின் அசைவையும் கவனிப்பேன். பஸ் டிரைவிங் எனக்கு எப்போதுமே அசகாய சூரத்தனம்தான். எப்படி பயமில்லாமல் இந்தப் பெரிய உருவத்தை ஓட்டிக் கொண்டு செல்கிறார்கள் என்று யோசிப்பேன். அக்சிலேடர், பிரேக், கிளைச் எனப் பலவற்றில் என மாறி மாறி அவரது கால்கள்  விளையாடுவதையும் கைகள் அனாயசமாக ஸ்டேரிங்கையும் கியரையும் சுழற்றி பஸ்ஸை ஒரு வளர்ப்பு பிராணி போல் திரும்ப வைப்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

பிரயாணத்தில் கடந்து போகும் இடங்கள், கட்டிடங்கள், விதம் விதமான மனிதர்கள் என பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஆயிரம் விடயங்கள். உண்மையில் பிரயாணங்கள் என்பது நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கு சமம்.
நாம் ஒரு இடத்தை கற்பனை செய்து வைத்திருப்பதைவிட அவ்வூர் மக்களை பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதைவிட அவை மிக வித்தியாசமாக இருப்பதை அங்கு சென்று பார்க்கும்போதுதான் 'கண்கூடாக' ariya முடியும்.

இந்தியாவில்தான் அவ்வளவு அழகான தார் ரோட்டுக்களை பார்த்தேன். நடுவில் விட்டு விட்டு போடப்பட்ட வெள்ளைக்கோடுகள், ஒவ்வொரு வளைவிலும் வளைவு வரப் போவதை சுட்டிக் காட்டுகின்ற மற்றும் இன்னபிற வீதி சமிக்கை போர்டுகள் என இலங்கையில் எங்களூரில் நான் பார்த்திராதவைகளை ரசித்தேன். அங்குதான் சிறு உடைசல்கூட இல்லாத வீதிகளை பார்த்தேன். அதுவரை ரோட் என்றாலே மனதில் சற்று உடைவுடன்தான் தோன்றும்.

பஸ் பிரயாணங்களில் சில நேரங்களில் நீண்ட பெரிய மேடுகளில் ஏறி இறங்கும்போது வயிற்றினுள் பட்டாம்பூச்சி பறப்பதுபோல இருக்கும். அந்தத் த்ரில் பிடிக்கும். 

நாங்கள் மதுரை டவுனூடாக செல்லும்போது ஓரிடத்தில் டிராபிக் ஜாமாக இருந்தது. ஒரு காரை சுற்றி நிறையக் கூட்டம் சேர்ந்திருந்தது. அதனால் கார் நகரமுடியாமல் திணற போலிஸ் உதவிக்கு வந்தார்கள். 

"அது ரஜனியாம்!" என்ற வார்த்தைகள் பேருந்தினுள்  இருந்த அனைவரது தலைகளையும் வெளியே நீட்ட வைத்தது. மூடப்பட்டிருந்த கார் கண்ணாடியால் யாராலும் அவரை பார்த்திருக்க முடியாது. ஆனால் அந்நேரம் ரஜனியின் காரைப் பார்த்ததற்கே பெருமைப்பட்டேன். 
சாதாரண மனிதனைவிட பிரபலத்திற்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலே வித்தியாசம்தான். அவர் எங்கு போனாலும் அவராலேயே அவருக்கு அது ஏற்படும்.  

பின் நாங்கள் கோயம்புத்தூர் டவுனிலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தள்ளியிருந்த மாமாவின் வீட்டை அடைந்தோம். அவர் முகாமில் இருக்கவில்லை. ஒரு மண் வீட்டில் அவரும் அவரது தம்பி செல்வராசாவும் அம்மம்மாவும் இருந்தார்கள். மண்வீடு, மண்பானை என நேரடியாக அனுபவித்தது அப்போதுதான்.
மாட்டுச் சாணத்தினால் பூசி மெழுகிய தரை. ஒரு விலங்கின் கழிவை புனிதமான சடங்குகளிற்கும்  வீடு கட்டுவதற்கும் மற்றும் இன்னபிற தேவைகளுக்கும் பாவிக்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

செல்வராசா மாமாவிற்கு கோபம் வந்தால் கையில் கிடைக்கும் மண்பானை எல்லாம்   போட்டு உடைப்பார். அம்மம்மா ஒன்றுமே சொல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் போன பின்புதான் "இந்த நாசமறுப்பான் எப்பவும் இப்படித்தான். இவ்வளவு சட்டி பானைக்கும் காசுக்கு எங்கே போறது என்று தன் புலம்பலை ஆரம்பிப்பார். அம்மம்மா தன் புத்திரர்களை கடுமையாக கடிந்து நான் பார்த்ததேயில்லை. அவர் அம்மாதானே; அவர்களை அவர் தண்டிக்கலாம்தானே என்று அப்போது எண்ணுவேன். ஆனால் அதன் காரணம் பிற்காலத்தில்தான் புரிந்தது. அதனை பிற்காலத்திலேயே கூறுகிறேன்.

ஒருநாள் உதயன் மாமா தான் நெருக்கமாக பழகிய ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் குழந்தையில்லாத தம்பதியினர். உதயன் மாமாமீது ரொம்பப் பாசமாகவே இருந்தார்கள். மாமா அவர்களுடைய மரப் பட்டறையில்தான் வேலை செய்தார் என் நினைக்கிறேன். என்னையும் அவர்கள் நன்றாக வரவேற்று உபசரித்தார்கள். சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என அடம்பிடித்தார்கள். தமிழர்களின் கலாச்சாரத்தில் விருந்தினர் சாப்பாடு வேண்டாம் என்றால் அது வீட்டுக்காரரை மாபெரும் அவமானத்திற்கு உள்ளாக்கிவிடும் என்பது தங்களுக்கு தெரிந்ததே. எனவே சாப்பிட உட்கார்ந்தேன். வாழையிலையில் சப்பாத்தி வைத்தார்கள். அதனை பிய்த்து வாயில் வைத்ததுதான் தாமதம் வயிற்றுக்குள் கலவரம் மூண்டு நான் வெளியே ஓடி வந்து வாந்தி எடுத்தேன். அவர்கள் திகைத்துப் போனார்கள். 
அவர்களது தேசிய உணவை அந்நியன் நான் முதன்முதலாக சாப்பிடும்போது இப்படி நடந்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? நான் அவர்களை அவமானப்படுத்திவிட்டதாக மாமா குறைபட்டுக் கொண்டார். அதன் பின் கொஞ்ச காலத்திற்கு சப்பாத்தியை நினைத்தாலே எனக்கு குமட்டிக் கொண்டுவரும். 

உதயன் மற்றும் செல்வராசா மாமாக்கள் மரப்பட்டறையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.அவர்கள் ஒரு கருவியால் மரக்கட்டையை தேய்க்கும்போது அதன் துகள்கள் கீழே விழுந்து படிப்படியாக அது பளபளப்பாக மாறும் அழகை ரசித்துக்கொண்டிருப்பேன். சில நேரங்களில் எனையும் உதவிக்கு அழைப்பார்கள். 

உதயன் மாமா அங்கிருப்பவர்களிடம் என்னை 'என்ர மருமகன்' என்று பெருமையாக அறிமுகப்படுத்துவார். ஆனால் நான் அப்போது யாரிடமும் கலகலப்பாக பேசமாட்டேன். சும்மா சிரித்து வைத்துவிட்டு அவர்கள் பேசுவதை வெறுமனே கேட்டுக்கொண்டு 
இருப்பேன். எனக்கு சலிப்பு ஏற்பட்டாலும் வெட்டிற்கு போவதற்கு மாமாவை வற்புறுத்த மாட்டேன். பிடிக்காத இடத்திலும் பொறுமையாக காத்திருக்கும் நல்ல அல்லது முட்டாள்த்தனமான பழக்கத்தை கற்றுக் கொண்டது என் மாமாக்களிடம்தான்.

கோயம்புத்தூரில் ஒரு தடவை உதயன் மாமாவுடன் மாலைக்காட்சி சினிமாவுக்கு போயிருந்தேன்.அது முரளி நடித்த இயக்குனர் விக்ரமனின் முதல் படம். படப் பெயரே 'முதல் வசந்தம்'தான். நான்கு நண்பர்கள் வாடகை வீட்டில் வசிப்பார்கள். அவர்களுக்கு இசைத் திறமை இருந்தது. அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிப்பார்கள். அதே நேரத்தில் ஒரு பெண் காதலுக்காக வீட்டை விட்டு ஓடிவந்து அவர்களுடன் இணைந்து கொள்வாள். அவர்கள் அவளை ஆவளது காதலனுடன் சேர்த்து வைக்க முயற்சிப்பார்கள். இப்படத்தில் இரண்டு முக்கிய கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் (அதுவும் ஒரே கூரையின் கீழ்!). காதலை விட நட்பு பெரிது என்பது அடுத்தது. அதுவரை வந்த சினிமாக்களில் இந்த கருத்துக்களை வலியுறுத்தி எதுவும் வந்ததாய் ஞாபகமில்லை. தமிழ் சினிமாவில் 
'நான்கு நண்பர்கள்' கதைகளை தொடக்கி வைத்ததும் இதுதான் என  நினைக்கிறேன். ஆபாசமில்லாத பாடல் வரிகள் மற்றும் காட்சிகள், மற்றவர்களின் மனத்தைக் காயப்படுத்தாத நகைச்சுவை என விக்ரமன் என்கிற 'விக்ரமாதித்யன்' தன் தனி முயற்சியில் சற்றும் மனந்தளராமல் தொடங்கிய முதல் வசந்தம் இது. அதில் வரும் 'கெளரிக்கு திருமணம் நிச்சயமாச்சு' என்ற பாடலை இப்போது கேட்டாலும் இன்றும் அந்தத் தியேட்டரில் அமர்ந்திருப்பது போல மனதை அங்கெ இழுத்துச் செல்லும். 'என்றும் அன்புடன் விக்ரமன்' என்று கடைசியில் திரையில் விரிந்த எழுத்துக்கள் இன்னும் என் மனத்திரையில் அழியாமல் இருக்கின்றன. ஒரு படத்தில் இயக்குனரின் பங்கு மிக முக்கியமானது என அறிந்து கொண்ட முத்த நாள் அது. 

படம் முடிந்து வெளியே வரும்போது மாமா படம் பார்த்ததை தன் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்றார். அவ்வளவு தைரியமான மாமாவே ஈன இவ்வளவு தூரம் மனைவிக்கு பயப்படுகிறார் என ஆச்சரியமாக இருந்தது. aththudan poi சொல்லும் திறமையும் எனக்கு இயல்பாகவே குறைவு என்பதால் உளறிவிடுவேனோ எனப் பயந்து கொண்டே வீடு திரும்பியது ஞாபகமிருக்கிறது. 

எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி சிறிய கடைக்காக கட்டப்பட்டு முன் கதவு மூடப்பட்டுக் கிடந்த ஒரு வீட்டிற்கு மாமா என்னைக் கூட்டிச் சென்றார். அதன் பின் வழியாக உள்ளே நுழைந்தால் ஒரு பத்துப் பேர் குழுமி அமர்ந்திருந்தார்கள். 
அதில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போதே சீட்டு விளையாடத் தெரியும். ஊரில் என் நண்பர்களுடன் ஆடியிருக்கிறேன். ஆனால் இவர்கள் பணத்தை வைத்து ஆடினார்கள். போலிஸ் ரெய்டு வந்து பிடிக்கும் என்பதால் அப்பழைய கட்டிடத்திற்குள் இருந்தார்கள். மாமாவுக்கு அவர்கள் எல்லோரையும் தெரிந்திருந்தது. நடுவில் பண நோட்டுக்களும் சில்லறைகளும் பந்தயமாக வைக்கப்பட்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அதில் ஒருவர் ஐம்பது ரூபாவை என்னிடம் கொடுத்து 
"தம்பி, எல்லோருக்கும் டீயும் வடையும் வங்கிக் கொண்டு வா" என்றார். "யாரிடமும் எங்களுக்குத்தான் டீ என்று சொல்லிவிடாதே!"
ஒரு பெரிய பிளாஸ்க் தந்தார்கள். எனக்குப் பயமாக இருந்தது என்றாலும் அவற்றை வாங்கி வந்து கொடுத்தேன். இருபத்தைந்து ரூபா அளவில் மீதம் இருந்தது. அதைத் திருப்பிக் கொடுத்தபோது "வேண்டாம் தம்பி, நீயே வச்சுக்க" என்றார். 
அங்கே உட்கார்ந்து டீயும் வடையும் சாப்பிட்டுக் கொண்டே யோசித்தேன்.தப்பான வேலையால் மட்டுமல்ல; அந்த வேலைக்கு உதவினால் கூட பணம் தாரளமாக வருகிறது. பின்னே, எனக்கு அதிகபட்சம் மாமா தருவது இருபத்தைந்து சதம்தான். அதுவும் எப்போதாவது ஒரு தடவைதான் தருவார். இது இருபத்தைந்து ரூபா...திடீரென பணக்காரனாகிவிட்டது போலத் தோன்றியது.

சில நாட்களின் பின் நானும் மாமாவும் திண்டுக்கல் சென்றோம். திண்டுக்கல் ஒரு மலை போலதொர்ரமளிக்கும் பெரிய குன்றுகளைக் கொண்ட பகுதி. முதன்முதலில் நான் அங்குதான் அவற்றைக் கண்டேன். சிறுவயதில் காலைக் காட்சியில் வழமையாக இரண்டு மலைகள் வரைந்து நடுவில் சூரியன் எழுவதுபோல வரைவேன். அதை அங்குதான் நேரில் பார்த்தேன். திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக்குண்டு எனப்படும் ஊரில் அம்மாவின் தங்கைகளான 
மனியண்டியும் தேவியண்டியும் முகாமில் இருந்தார்கள். அந்த ஊருக்குள் நுழையும்போது படங்களில் பார்த்ததுபோல 'வத்தலக்குண்டு உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்றது ஒரு 'போர்டு'. 

உள்ளே நுழையும் முன் ஒரு தேநீர்க்கடையில் கோழி சோடா குடித்தோம். இலங்கையில் அப்படி ஒன்று இல்லை. சொடப்போத்தலின் வாய்ப்பகுதியின் உள்ளே காற்றுப் புகாதபடி ஒரு கோலிக்குண்டு (போளை) அடைக்கப்பட்டிருந்ததாக ஞாபகம். 

தகரம் மற்றும் சீற்ரால் ஆன நீளமாக உருவாக்கப்பட்டு அறைகளாக பிரிக்கப்பட்ட ஒரு தற்காலிக வசிப்பிடத்தில் அவர்கள் வசித்தனர்.  
முத்தநேன்தலில் நாங்கள் இருந்த விடுதி எவ்வளவோ தேவலாம் போல இருந்தது. 

ஒரு நாள் தேவிஆன்டி   எங்கேயோ போய்விட்டு வந்து தான் ஒரு சினிமா சூட்டிங் பார்த்ததாக கூறினார். 'என் ராசாவின் மனசிலே' பட சூட்டிங்கில் 'ராஜ்கிரண் மற்றும் பலரை' பார்த்ததாக கூறினார். அந்தப் பலரில் வடிவேலும் ஒருவர் என்பது பின்பு  தெரிந்தது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று அன்று முழுவதும் மனவருத்தப்பட்டேன். 

அங்கு சுள்ளி பொறுக்க எல்லோருடனும் போவதைத் தவிர வேறு எதுவும் சுவாரசியமாய் நடந்ததாக ஞாபகமில்லை.  
எனவே முத்தநேந்தலுக்கே மறுபடி போய்விடலாம்.

உதயன் மாமா என்னை மறுபடி ஊரில் விட்டுச் செல்வதற்காக மதுரைக்கு வந்தார். ஆனால் அங்கிருந்து முத்தநேந்தலுக்கு தனியே போய் விடுகிறாயா என்று கேட்டார்.முத்தனேந்தல் அங்கிருந்து முப்பத்தாறு மைல். எனக்கு தனியே பிரயாணித்த முன் அனுபவம் இருந்ததனால் சரியென தலையாட்டினேன். இருந்தாலும் அதை இப்போது நினைத்தால் கொஞ்சம் ஓவர் ரிஸ்க் எடுத்திருக்கிறோம் எனப் புரிகிறது. கொஞ்சமேன்றால் இந்தியாவின் காணாமற் போன சிறுவர்களின் பட்டியலில் நானும் சேர்ந்திருப்பேன்.
சரியாக முத்தநேன்தலில் பச்சை நிறுத்தி இறங்க வேண்டுமே எனப் பயந்து கொண்டே வந்தேன். ஒருவாறாக இறங்கிவிட்டேன். 

முத்தநேந்தலில் நானும் என் நண்பன் ஒருவனும் பொழுது போகவில்லை என்றால் மெய்ன் ரோட்டிற்கு அருகில்  பிரயாணிகள் அமர்வதற்காக பஞ்சாயத்தாரால் போடப்பட்டிருந்த ஒரு சீமெந்து இருக்கையில் அமர்ந்து கொள்வோம்.
நான் என் ஊர் ரோட்டுக்களில் இவ்வளவு வாகனங்களைப் பார்த்ததில்லை. இரண்டு பெரும் ஆளுக்கொரு வாகனத்தை தெரிவு செய்வோம். அதாவது எனக்கு பஸ் என்றால் அவனுக்கு லாரி. குறிப்பிட்ட நேரத்திற்குள் பஸ் அல்லது லாரியில் எது அவ்வீதியால் அதிகமாக செல்கிறது என எண்ணிக்கொண்டிருப்போம். ஒரு பஸ் அல்லது லாரி வர வர எண்ணிக்கை கூடிக் குறைய  எவ்வளவு சுவாரசியமாய் இருக்கும் தெரியுமா?

ஒருநாள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு பெரியவர் கொஞ்சம் மூட்டை முடிச்சுக்களுடன் 
வந்து எங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கத் தொடங்கினார். சற்று நேரத்தில் பஸ் வந்தது.
நின்றது. அவர் அவசர அவசரமாக பஸ்ஸினுள் ஏறினார். 

"தம்பி, அந்தப் பைகளை எல்லாம் எடுத்துத் தா..."என்றார் அங்கிருந்தே.
இங்கு ஒரு விஷயம். இலங்கையில் முன்பின் தெரியாதவர் என்றால் அது சிறுவர்கள் என்றாலும் 'நீங்கள்' என்று மரியாதையாகத்தான் அழைப்போம். எனவே எனது கோணத்தில் அவர் மரியாதையில்லாமல் அழைத்தது மட்டுமல்லாமல் எதோ வேலைக்காரன் மாதிரி 
வேலை செய்யச் சொல்கிறாரே எனப்பட்டது. ஆனால் அந்த உதவி செய்வது பெரிய காரியமல்ல என்பதனால் இருவரும் இருந்த மூட்டை முடிச்சுக்களை பஸ்ஸினுள் ஏற்றினோம். பஸ் புறப்பட எத்தனிக்க,"தம்பி, இந்தா..." என அவர் என் கையில் ஏதோ வைத்து அழுத்தினார்.
பஸ் போனபின்தான் பார்த்தேன். அது ஒரு ரூபாய் நாணயம்! அடப்பாவமே...!அவர் எங்களை கூலிக்கு பொதி தூக்கும் சிறுவர்கள் என நினைத்துவிட்டார். இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

இப்போது எங்கள்  ஊருக்கு அருகில் இருக்கும் வைகை  ஆற்றுப் பாலத்தடி சம்பவங்கள்.அந்தப் பாலத்தில் வைத்துத்தான் என் நண்பன் ஒருவன் என் முன்பால் மிதப்பை வைத்து எனக்கு இலவசமாக பட்டமளித்தான். "போடா...நீ ஒரு பல்லன்" என்றான்.

அந்தப் பாலம் தொடங்கும் இடத்தில் உயரம் குறைவாக இருக்கும். அங்கிருந்து மணலில் குதித்து விளையாடுவோம்.அந்த உயரம் என் வயதிற்கு அதிகமுமில்லாமல் குறைவுமில்லாமல் இருந்ததனால் ஒவ்வொரு முறையும் பாயும் ஒரு 'த்ரில்' உடல் முழுவதும் பரவும். ஈர்ப்புச் சக்தியை வெல்லும் ஆசை எப்போதும் மனிதனின் அடி மன ஆசை என நினைக்கிறேன்.

அந்தப் பள்ளத்தின் கீழ்தான் என் நண்பன் பந்தயத்திற்காக யாருமில்லை என்ற தைரியத்தில் சேட், டவுசர் இரண்டையும் கழற்றினான். மற்றொருவன் அந்த உடுப்புக்களை பறித்துக் கொண்டு ஓட இவன்
நிரானமாக துரத்தியதை பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரித்ததும் நடந்தது. 

ஆனால் அப்பாலத்தை வாழ்க்கையில் மறக்க முடியாதவாறு என் வாழ்க்கையோடு விதி விளையாடிய சம்பவமும் நடந்தது. 

அப்போது ஆற்றில்  வெள்ளம் கரை புரண்டோடியது. எங்களுக்கு சந்தோசம் கரை புரண்டோடியது. வைகை செல்லும் நீரோட்டத்தில் மக்கள் கரைகளில் குளிக்க ஆரம்பித்தார்கள்.நாங்களும் களத்தில் இறங்கினோம். 
பல நண்பர்கள் கரையோரத்திலேயே பயத்துடன் குளிக்க எங்களில் சிலருக்கு கடலில் குளித்த அனுபவம் இருந்ததனால் தண்ணீரில் நன்றாக முன்னேறி நீந்தினோம். ஒரு இடத்தில் நீந்தி வந்த ஒருவர் தான் கடந்து வந்த இடத்தைக் காட்டி "அங்கே போக வேண்டாம்...சரியான ஆழம்...!"என்றார்.  ஆனாலும் பலர் அந்த இடத்தில் நீந்தினார்கள்.
ehDk; tpjp miof;f mq;NfNa gha;e;J ePe;jj; njhlq;fpNdd;. gpd; ePr;riy epWj;jp epd;W vt;tsT Mok; vd;W fhiy tpl;Lg; ghHj;Njd;. epyj;ijNa fhNzhk;! Mokwpahky; fhiy tpl;Ltpl;Nlhk; vd mg;NghJjhd; Ghpe;jJ! neQ;R glglf;f Muk;gpj;jJ. me;j mz;zh vd;idg; ghh;j;J 'Nla;> eP Vz;lh mq;Nf Nghdha;? rPf;fpuk; ,e;jg; gf;fk; th..." vd;whh;. mth; mg;gbr; nrhd;dJjhd; jhkjk; vdf;Fs; KOikahf tpahgpj;jJ. fhy; if vy;yhk; tpiwj;Jtpl;lJ போலிருந்தது. என்றாலும் பயப்படாதவன் போல காட்டிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகத் தாவினேன். ஓரிடத்தில் மணல் கால்களில் தட்டுப்பட்டது. ஆனால் அது சரிவாக இருந்தபடியினால் நான் கால் வைத்ததும் sariya ஆரம்பித்தது. மூழ்க ஆரம்பித்தேன். உண்மையில் நான் இன்னும் கொஞ்சம் தாவியிருந்தால் இலகுவாக மேட்டுக்கு வந்திருப்பேன். ஆனால் இந்தப் பயம் இருக்கிறதே...அம்மாடி!
அந்தப் பயத்தை நினைத்தால்தான் இன்னும் பயமாக இருக்கிறது. அந்தக் கணத்தை இப்போது கற்பனை செய்தாலும் மூச்சுத் திணறும்.    
காலை வைக்க வைக்க மணல் இன்னும் சரிந்து என்னை இன்னும் உள்ளே இழுக்க ஆரம்பித்து.

"அண்ணா...! ennaip..." என் வாய் மட்டத்தை தண்ணீர் மூடிவிட கையால் மேல் நீர்பரப்பை அடித்தேன். நல்லவேளை, அந்த அண்ணன் பாய்ந்து வந்து என் கையைப் பிடித்து இழுத்து ஏற்றிவிட்டார். udane கரையேறினேன். வீட்டில் சொல்ல வேண்டாம் என avaraik கேட்டுக் கொண்டேன். இதுவரைக்கும் என் வீட்டாருக்கு தெரியாது. ஆறு வடிந்த பின் அந்த இடத்தை போய் பார்த்தேன். நான்கைந்து பெரியவர்களை மூழ்கடிக்கும் அளவு ஆழமான பள்ளமது. எனக்கு மெய் சிலிர்த்தது.
appothellaaam புகைப்படத்தின் மகத்துவம் அறியாமல் இருந்தேன். கமெரா போல கால இயந்திரம்எதுவுமில்லை. நான் சிறுவயதில் அனேகமாக போட்டோவே  எடுத்ததில்லை.  பொதுவாக என் வீட்டில் நான் பிறந்ததில் இருந்து எதுவித விசேட வைபவங்களும் இடம்பெறவில்லை. athanaal அதில் எடுக்கப்பட்டிருக்கக் கூடிய சிறுவயதுப் போட்டோக்களும் இல்லை.
நான் குழந்தையாக தவழுகையில்  (எங்கள் ஊரில் இதனை உடும்பு பிடிப்பது என்பார்கள்) ஒரு shrudiyoovil eduththa படம் irunthathu.அதில் அழகாக கொழு கொழுவென இருந்தேன்.அதுவும் அதன் முக்கியத்தை உணர்ந்து பத்திரப்படுத்துவதற்குள் கால 
ஓட்டத்தில்  காணாமல் போய்விட்டது.   என் வாழ்வின் மிகப் பெரிய துக்கங்களில் அதுவும் ஒன்று. மறுபடி குழந்தையாகி தவழ்ந்தா ஒரு போட்டோ எடுக்க முடியும்?  காலத்தைப் போல இரக்கமில்லாதவனை உலகில் காணமுடியாது. 

குணமண்ணா  ஒரு தடவை ஒரு கமெரா கிடைத்து தன நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கமெரா என்பது கிடைத்தற்கரிய பொருள். அது கிடைத்ததனால் குணமண்ணா  என்னையும் சாந்தனையும் தங்கச்சியையும் மொட்டிமாடிக்கு ஓடச் சொன்னார். 
அங்கு எங்கள் மூன்று பேரையும் ஒன்றாக நிற்க வைத்து படமெடுத்தார். அதுதான் இப்போது என் கைவசம் இருக்கும் என் மிக வயது குறைந்த பழைய போட்டோ. அதை பார்க்கும் போது மனிதனின் வளர்ச்சிப் பரிமாணங்களின் யதார்த்தம் உறைக்கும். இப்படியா நான் முன்பு இருந்தேன்?!
சில மாதங்களின் பின் எங்கள் பஞ்சாயத்து அலுவலகம் சிறிய போலீஸ் ஸ்டேசனாக மாறியது. டிவி மட்டும் அதே ஜன்னலுக்கு அருகில் இருந்து தரிசனம் தந்தது.
போலீஸ்காரர்களை வெகு அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சில நேரங்களில் எங்களை டீ வாங்கி வரச் சொல்வார்கள். அப்போது உள்ளே சாத்தியிருக்கும் நீளமான குழல் துப்பாக்கியை பார்ப்பேன்.இலங்கையில் a.k.47 போன்ற அதி நவீன ஆயுதங்களை கண்டிருந்தாலும் இதனைக் கண்டதில்லை.
இது போலிசாருக்காகவே உருவாக்கப்பட்டது போலும். பிற்காலத்தில் இலங்கை  போலிசும்  அதை வைத்திருக்கக் கண்டேன். அங்கே கைதிகளை
அடைத்து வைக்க ஒரு செல் மட்டுமே இருந்தது.

அங்கு நர்சரி பள்ளியில் சத்துணவு வழங்குவது வழமை. அந்தப் பாடசாலையில் சத்துணவு பற்றிய கணக்கு வழக்குகளை சரிபார்க்க வந்த பரிசோதகர் ஒருவர் கணக்கில் என்ன பிழை கண்டாரோ அவரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். ஆசிரியையும் கொடுத்திருக்கிறார். அவர் போனவுடன் ஆசிரியை நேராக பக்கத்திலிருந்த இப் போலிஸ் ஸ்டேசனில் முறையிட்டு விட்டார். தமிழ் நாட்டு போலிஸ் அல்லவா? சும்மா விடுமா? உடனடியாக செயற்பட்டு மானாமதுரைக்கு பேருந்தில்  போய்க் கொண்டிருந்த  அந்த அதிகாரியை
மானாமதுரைக்கு போவதற்கு முன்பே இடைமறித்து கைது செய்தது.
செல்லில் அடைத்து வைத்திருந்த அவரை ஆசிரியை அடையாளம் காட்டவோ என்னவோ வெளியே இழுத்து வந்தனர். ஆம்! இழுத்துத்தான்! உள்பனியனும் ஜீன்சுமாக அவர் நின்றார். நிறைய அடி வாங்கிய அறிகுறிகள் உடலில் தெரிந்தன. மக்கள் எல்லோரும் குழுமி
நின்று பார்த்தோம். அப்படி ஒரு காட்சியை சினிமாவை அடுத்து நேரில் பார்ப்பது அப்போதுதான் என்பதனால்
எனக்கு மிகவும் சுவாரசியமாகப் பட்டது.

அந்த ஆசிரியை அவருக்கு அருகில் வந்து "ஆமா சார்...இவன்தான்!" என்றபடி அவரது முகத்தில் காறித் துப்பினார். அந்த எச்சில் அவரது முகத்தில் வழிந்தது. அதை துடைக்கக் கூட உணர்வில்லாமல் எங்கோ வெறித்தபடி நின்ற
அவரது கண்கள் என்னை என்னவோ செய்தது. ஜேசுநாதரை இப்படித்தான் இழுத்து வந்து கசையடி கொடுத்து அவமானப்படுத்தி சிலுவையில் அறைந்தார்கள் என்று சிறுவயதிலிருந்தே
கேட்டு வளர்ந்ததனால் என்னவோ எனக்கு கைதிகள் என்றாலே இரக்கம் வந்துவிடும்.  அதிலும் இச்சந்தர்ப்பத்தில்
நாகரீகமில்லாமல் முகத்தில் உமிழும் தமிழ்நாட்டுப் பழக்கத்தை அடியோடு வெறுத்தேன். அவர் குற்றமே செய்திருந்தாலும்
அவரை அடித்து நிர்வாணப்படுத்த பொலிசாருக்கோ அல்லது காரித்துப்பி அவரை அவமானப்படுத்த அந்த ஆசிரியைக்கோ கடுகளவும் உரிமையில்லை. அத்துடன் லஞ்சம் வாங்குவது குற்றமென்றால் கொடுப்பதும் குர்ராம்தானே? ஆசிரியையும் பிடித்து அடித்தால் என்ன என்று தோன்றியது.
   
இன்னொரு நாள் எண்கள் ஊருக்கு ஒரு நாடகக் குழு வந்தது. அது 'அறிவொளி' இயக்கம்.
கல்வியின் மகத்துவத்தை கிராமங்கள்தோறும் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது.
அதைப்பற்றி பத்திரிகைகள் வாயிலாக ஏற்கனவே அறிந்திருந்தேன். அவர்கள் நடுவீதியில் நின்று 'அன்பே சிவம்' படத்தில் வருவது போன்ற கூத்து நடத்தினார்கள். ஆனால்  அது சமூக நாடகம்தான்.  ஒருவர் இன்னொருவரிடம் வந்து "ஐயா, இந்த பஸ் எங்க  போகுது சொல்லுங்கையா?"
என்பார். அதற்கு அடுத்தவர் "ஏன் உங்களுக்கு கண் குருடா?"என்பார். அதற்கு அவர் " ஆமாய்யா, நான் ஒரு குருடந்தான்ய, அறிவுக் கண்ணில்லாத குருடன்யா..."என்பார். தொடர்ந்து பாடல் ஒலிக்கும்.

"கண்ணிருந்தும் குருடராகிப் போனோமே,
காதிருந்தும் செவிடராகிப் போனோமே,
வாயிருந்தும் ஊமையாகிப்  போனோமே,
inthak கல்வி எனும் அறிவொளி இல்லாததாலே..."

என அது தொடரும். உண்மையில் அறிவொளி இயக்கம் மிகத் திறனுடையதாக செயற்பட்டதை பின்பு கேள்விப்பட்டேன். இந்தியாவைப் போன்ற எழுத்தறிவு குறைந்த நாடுகளுக்கு இப்படியான ஒரு விழிப்புணர்வு கட்டாயம் தேவை. அதற்கான மிக நேரடியான ஊடகமாக இக்கூத்து வடிவம் பயன்படுத்தப்பட்டமை சாலச் சிறந்ததாகும். அதுவும் இந்த அறிவொளி இயக்கத்தில் சம்பளமில்லாமல் பல தொண்டர்களே தங்கள் நேரம், பணம், சக்தி ஆகியவற்றை செலவழித்து சேவை  செய்தமை enakkuஆச்சரியமளித்தது.  
இன்னொரு நாள் இன்னொரு 'கூத்தாடிக் கூட்டம்' எங்கள் ஊருக்கு வந்தார்கள். ஆம்.அப்படித்தான் அவர்களை ஊரில் அழைத்தார்கள். நான் அவர்களது ஆட்டம் தொடங்கிய பின்புதான் சத்திரத்தை விட்டு வெளியே வந்து பார்த்தேன். பெரியவர்களும் சிறியவர்களுமாக ஐந்தாறு பேர். கலர்கலரான ஆடைகளுடன் டேப் ரேக்கொர்டரில் போட்ட பாடல்களுக்கு ஆடினார்கள். summaa sollak koodaathu. 
அச்சு அசலாக ஆடினார்கள். அதில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் என்னைக் கவந்தார்கள். அவர்கள் இதற்காகவே பிறந்து வளந்தவர்கள் போல ஆடினார்கள். பிறகுதான் தெரிந்தது. உன்மையிலேய பிறந்ததிலிருந்தே இதற்காகவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். பிறந்ததிலிருந்தே ஸ்கூல் 
பக்கமே போனதில்லையாம்.அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்பா, அம்மா,மகன், மகள், மாமா என அத்தனை பேரும் ஒரே தொழிலாக அதுவும் ஊர் ஊராக (வீடே இல்லாமல்) இப்படி ஆடிப் பாடி பிழைக்கிறார்கள்.

  அவர்களது வீடு எது தெரியுமா? ஒரு குதிரை வண்டில். அவர்களது மொத்த சொத்தே அவ்வளவுதான் அந்த veeddil இருந்தபடிதான் அச்சிறுவன் தங்களைப் பற்றி
எனக்கு பேட்டி தந்தான்.எனக்கு என்னவோ அவனிடம் பேசுவதே பெருமையாக இருந்தது. இலங்கையர்கள் என்றதும் அவனும் ஆர்வமாக பேசினான்.
உலகம் பூராவும் திறமைசாலிகள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஏனென்றால் அதற்கு அதிஷ்டம் தேவை.அதிஷ்டம் எல்லோருக்கும் கிடைத்தால் அதன் பெயர் அதிஷ்டமல்ல.

இந்தியாவுக்கு வந்த அடுத்த நாளிலிருந்தே நாம் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற கேள்வி மனதில் எழுந்து கொண்டேயிருந்தது உண்மைதான்.
நாட்கள் மாதங்களாகி வருடமாகியும் இன்னும் நாங்கள் இந்தியாவில்தானே இருக்கிறோம். என் நாம் இன்னும் திரும்பிப் போகவில்லை; ஒரு வேலை திரும்பி போகவே மாட்டோமோ என்றெல்லாம் சிந்தனை ஓடும். அப்போது நாங்கள் கிட்டத்தட்ட கைதிகள் போலத்தான் இருந்தோம். அரசாங்கத்தின் கைகளில்தான் எல்லாம் இருந்தன. அவர்கள் அனுப்பினால்தான் உண்டு.

பாப்பாவுக்கு சிவகங்கையில் வேலை கிடைத்திருந்தது. அவருக்கு வேலையும் இந்தியாவும் பிடித்துக் கொண்டதோ என்னவோ இலங்கைக்கு திரும்புவதில் அவர் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மூத்த அண்ணாவோ திரும்புவதற்கு துடித்துக் கொண்டிருந்தார். enkalin padippu kulampukirathu.
இலங்கைக்குப் போனால் செட்டிலாகலாம்; இந்தியா சரிப்படாது என்றெல்லாம் பாப்பாவுடன் வாதிடுவார்.         

நாங்கள் இந்தியாவுக்கு வந்து சுமார் இரண்டு வருடங்கள் இருக்கும். திடீரென ஒரு நாள் இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகள் தங்களின் பெயர்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

உடனடியாக periyannan எங்கள் குடும்பத்தின் பெயரை பதிந்தார். மறுபடி இலங்கைக்கு திரும்புவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு பிரயாணங்கள் pidikkum என்பதனால் பிரிவுகளை கணக்கெடுப்பதில்லை.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் நாங்கள் மீண்டும் மூட்டை முடிச்சுடன் தயாரானோம். நாங்களும் இன்னும் சில குடும்பங்களும் laarikalil ஏறிக்கொண்டோம்.
எங்களை வழியனுப்புவதற்காக சத்திரத்து சனங்கள்  வெளியே நின்றார்கள். புறப்பட முன் நான் என் நண்பன் ஒருவனுக்கு என்னிடமிருந்த 50 பைசாவை நினைவுப்நாங்கள் raameshvaraththilirunthu kappalil pokap pokirom enak ku santhosam thaankavillai. aanaal athu naan ninaiththa alavukku piramaaandamaaka irukkavillai.
 பரிசாகக் கொடுத்தேன்.


ehq;fs; uhNk];tuj;jpypUe;J fg;gypy; Nghfg; Nghfpd;Nwhk; vd;W Nfs;tpg;gl;L vdf;F re;Njhrk; jhq;ftpy;iy. Mdhy; mJ ehd; epidj;jsT gpukhz;lkhf ,Uf;ftpy;iy. MdhYk; %d;W jl;Lf;fisf; nfhz;l fg;gy; jhd; jkpo;ehL KOtJk; ,Ue;jJ. jpUk;gp Nghtjw;F gjpe;j midj;J mfjpfisAk; Vw;wpf; nfhz;L fg;gy; Gwg;gl;lJ. ehq;fs; te;j gaq;fuj;ijAk; NghFk; uhahq;fj;ijAk; vz;zp rpupj;Jf; nfhz;Nld;. te;jhiu thoitf;Fk; jkpo;ehL vq;fis thoitg;gjpy; jtwtpy;iy vd;gJ cz;ikjhd;. Vw;fdNt rdj;njhif mjpfupg;ghy; Vo;ikapy; thLk; jkpo;ehl;bd; rdj;njhifapy; ehq;fSk; jpBnud xU mjpfupg;igf; fhl;bdhy; vg;gb ,Uf;Fk;. mJTk; tpUe;jhopfshf! ,e;jpah;fs; czh;r;rp trkhdth;fs;. md;NghL cgrupg;ghh;fs; my;yJ mupthisj; Jhf;Fthh;fs;. ve;j czh;r;rpahdhYk; cr;r gl;rk; ntspg;gLj;Jthh;fs;. mth;fSlhd rkhh; ,uz;L tUl tho;f;if vd; ghh;itfis tprhyg;gLj;jpaJ.
,e;jpah ,yq;iff;F ntspehL vd;whYk; mij ntspehL vd;W ehq;fs; nrhy;tjpy;iy. Vnddpy; ntspehL vd;whNy thdk; njhpAk; khspiffSk;12 mLf;fpitf;fg;gl;l jPg;ngl;bfs; Nghy efUk; fhh;fSk; b]; G]; vd;w Mq;fpyk; NgRk; nts;is kdpjh;fSNk kdjpy; tUtjhy;> fpl;lj;jl;l vq;fs; ehl;ilg; NghyNt ,Ue;j ,e;jpahit ntspehL vd kdJ Vw;f kWf;fpd;wJ. Rk;kh N[hf;fhf ehq;fSk; ntspehL NghNdhk; vd;W nrhy;ypf; nfhz;Nlhk;. me;j fg;gypy; Vwp uhNk];tuj;jpypUe;J jiykd;dhiu te;jile;Njhk;. mq;Nf vy;NyhUf;Fk; ghZk; gUg;Gf; fwpAk; toq;fg;gl;lJ. mtw;iw ey;y grpahy; Urpj;Jr; rhg;gpl;lJ QhgfkpUf;fpd;wJ. gpd; xUthwhf kd;dhhpypUe;j vq;fs; tPl;il te;jile;Njhk;. ,e;jpahtpypUe;J jpUk;gpaJk; ehd; vl;lhk; Mz;by; ,uz;lhk; jtizapy; ghlrhiyf;Fr; Nrh;e;Njd;. Mdhy; ,e;jpahtpw;F Ngha;te;j Mz;Lf; Fog;gj;jpy; xd;gjhk; Mz;L gbf;f Ntz;ba ehd; vl;lhk; Mz;by; ,uz;lhk; jtizapy; ghlrhiyf;Fr; NruNtz;bajhapw;W. mjdhy; vd;dld; rpWtajpypUe;J gbj;j vd; ez;gh;fis ,oe;Njd;. mdhy; GJ ez;gh;fs; epiwag;Ngh; fpilj;jdh;.
ehq;fs; Kd;gpUe;j gioa Fthl;l]pNyNa jq;fpNdhk;. ,e;jpahtpw;Fg; Ngha; te;jJk; VNjh xU tifapy; ehd; tFg;gpypUe;j kw;wth;fistpl nghpatd; vd;w czh;T te;jJ. Mdhy; ,e;jpahtpw;g; Ngha; te;jJ ngUik kl;Lky;yhky; rpy Neuq;fspy; mJ NfypAk; nra;ag;gl;lJ.
rpyh; ehq;fnsy;yhk; ,q;Nf ,Ue;jk; jhNd> nrj;jh Ngha;tpl;Nlhk;? vd;whh;fs;. mjw;f ehq;fs; ,e;jpahitg; ghh;g;gjw;F ,ijtpl;lhy; kypthf xU re;jh;g;gk; fpilf;Fkh? ePq;fs; mjid ,oe;J tpl;Bh;fs; vd thjpl;Nlhk;. cz;ikapy; ,e;jpahitg; ghh;f;f Ntz;Lk; vd;w MtYk; mfjpfshf gilnaLj;j fhuzq;fspy; xd;W vd;why mij ahuk; gWf;f KbahJ.
,d;ndhd;W vq;fs; khwpg;Nghd Ngr;R nkhop ehd; ,yq;if te;jhYk;  mJ rhpahf gjpyopf;fhky; nyhwpia yhhp vd;Nwd;> xgPir MgP]; vd;Nwd;> ,J Nfypf;F cs;shdJ. gpd; Nghfg; Nghf mJ gioa FUbf;fj; jpUk;gpaJ.
ghlrhiyapy; Mrpupaiuj; rhh; vd;W miof;fj;jhd; tha; te;jJ. fug;gl;L Nrh; vd;Ngd;. mtUf;F mUfpy; NghdTlNdNa iffs; gof;f Njhrj;jpy; fl;bf;nfhs;Sk;. ey;y Ntis mjid ahUk; ftdpf;ftpy;iy. cz;ikapy; MrpupaUf;F mUfpy; epw;Fk;NghJ if fl;lhky; epw;gJ VNjh jtW nra;tJ Nghy mg;NghJ Njhd;wpaJ. gpd;G mJTk; khwpg; NghdJ.

vl;lhk; Mz;by; vdf;F tujuh[d;> nwhf;rd; vd ,Uth; ez;gh;fshdhh;fs;. ,UtUNk jho;TghL fpuhkj;ijr; Nrh;e;jth;fs;.
tujuh[d; xy;ypaha; ,Ug;ghd;. nwhf;rd; eLj;juk;. ,Uspy; MW fpNyhkPw;wh; njhiytpypUe;J jq;fs; CupypUe;J irf;fps; ,y;yhJ nry;fpd;wdh; vd;gJ Mr;rupag;gl itj;jJ. fpuhk ghlrhiyfspd; Jujplk; vd;dntd;why; mq;Nf Mrpupah;fk Nghfj; jahuhthh;fs;> mjdhy; gps;isfSk; Nghfj; jahuhthh;fs;. trjpfisj; NjLtJ kdpj ,ay;G vd;gjhy; ey;y fy;tp fpilf;Fk; vd;w ek;gpf;ifapy; jq;fs; ed;whf gbf;ff; $ba gps;isfspy; Vd; ,e;j rpd;dg; gs;spf;$lj;jpy; gbf;f itj;J mth;fs; gbg;ig tPzhf;f Ntz;Lk;> vd ngw;Nwhh; vz;Zfpwhh;fs;. ,jdhy; fpuhkj;J ghlrhiyfspd; tsh;r;rp ntFthfg; ghjpf;fg;gLfpd;wJ. fpuhkq;fspypUe;J efuj;Jf;F te;J ghh;j;jth;fs; NtiyAk; efuj;jpNyNa fpilf;f mq;NfNa jq;fptpLfpd;whh;fs;. fpuhkk; NtW topapy;yhky; njhlh;e;Jk; mq;NfNa ,Uf;fpd;wJ.
mJNghf tujdk;> nwhf;rDk; Fzj;jpy; NtWgl;lth;fs;. tujd; nfhQ;rk; nkd;ikahdtd;> nwhf;rd; nfhQ;rk; Kuld;. xNu Ch; vd;gjhy; ez;gh;fsha; ,Ue;jhh;fs; vd epidf;fpd;Nwd;.Vnddpy; gpd;dhspy; tujd; nwhf;rDld; rz;il gpbj;Jf;nfhz;L xd;gjhk; Mz;bypUe;J gjpndhuhk; Mz;Ltiu mtDld; Ngrhky; ,Ue;jhd;. tujDld; nwhf;rd; NgRtjpy;iy vd;w xNu fhuzj;jpw;fhfNt ehDk; mtDld; Ngrtij epWj;jptpl;Nld;. ,jw;F vd;d cstpay; fhuzk; ,Uf;f KbAk; vd ,d;Wk; Ghpatpy;iy. rpyNtis vdf;F nwhf;rdpd; el;igtpl tujdpd; el;G gpbj;jjhf ,Ue;jpUf;f Ntz;Lk;. mjhtJ mtdJ md;ghd Nghf;F gpbj;jpUf;fyhk;.
nwhf;rd; ey;ytd;jhd; vd;whYk; mtDila rw;Nw myl;rpag;Nghf;Fk; rw;Nwwf;Fiwa cs;s jw;ngUikf;FzKk; mtdpy; vdf;Fg; gpbf;fhjitjhd;. kw;wth;fis kl;le;jl;bg; NgRgth;fis vdf;Fg; gpbg;gNjapy;iy.
Mdhy; mth;fs; ,Utupd; vjph;fhyk; ehd; epidj;jjpw;F vjph;khwhf ,Ue;jJ. ,ij vOJk; Neuk; nwhf;rd; ghjpupahh; mfptpl;lhd; my;yJ Mfptpl;lhh;. tujd; ghjphpahh; mtjw;F KOikahf Kaw;rpj;Jf;nfhz;L ,Uf;fpd;whh;. ehd; mbf;fb tujDld; ciuahl jho;Tghl;bw;Fr; nry;Ntd;. ehd; mbf;fb tujdpd; Cuhd jho;Tghl;bw;Fr; nry;Ntd;. jho;TghL rpwpa XusTf;F mofpa fpuhkk;. flYk; fly;rhh;e;j kzYk; njd;id kuq;fSk; mjd; kf;fspd; tpj;jpahrkhd Ngr;Rtof;Fk; vdf;Fg; gpbf;Fk;. ehd; ,Ue;j cg;Gf;Fsj;jpypUe;J jho;TghL Rkhh; vl;Lf; fpNyhkPw;wh; tUk;. Rkhh; ,uz;L fpNyhkPw;wh; ele;J te;J g]; vLj;J mq;F nrd;Nwd;.
Kjd; Kjyhf ehd; jho;Tghl;bw;fg; NghdJ QhgfkpUf;fpd;wJ. g];]py; epd;W ,wq;fp ehd; tujdpd; tPl;bw;F mq;F epd;wth;fsplk; top Nfl;Nld;. mq;F vy;NyhUf;Fk; tujdpd; tPL njhpe;jpUe;jJ. fpuhkj;jpy; trpf;Fk; rpWtdpd; ngah;$l kw;wth;fSf;F njhpe;jpUf;fpd;wJ. efuj;jpw;fk; fpuhkj;jpw;fk; mJjhd; tpj;jpahrk;. gf;fj;J tPl;by; gj;J tUlkhf tho;e;jhYk; fzgjpah? mg;gb xUtiu vq;fSf;Fj; njhpahNj vd;gh;fs; efu thrpfs; kw;wth;fspd; tplaq;fspy; %f;if Eisf;f$lhJ vd;whPjpapy; ,J rhp vdg;gl;lhYk;> rpy czh;Tt+h;tkhd cwtj; Njitfis gy Neuq;fspy; G+h;j;jp nra;a,ayhky; Ngha;tpLfpd;wJ. tujdpd; tPl;by; mk;kh >mg;gh> mz;zh vd FLk;gnk tuNtw;fpd;wJ. ehd; jdpNa xU rKjha mq;fj;jpduhf kjpf;fg;gl;lJ mJjhd; Kjy; jilt. vl;lhk; Mz;L gbf;ifapy; mJ xU tpj;jpahrkhd mDgtk;. tujd; gpd; vd;idflw;fiuf;F $l;br; nrd;whd;. miyghAk; fliyg; ghh;j;Njhk;. gs;spf;Flhtpy; ghh;j;jgpd; ,q;Fjhd; me;j miyghAk; fliy kWgbAk; ghh;j;Njd;. ehd; mq;fpUe;J jpUk;gk; NghJ tpiy cah;e;j fUthlfisg; ghh;ry; gz;zpj; je;jdh;. gzk; thq;f kWj;J tpl;ldh;. fpuhkq;fspy; md;gpdhy; ,g;gbAk; elf;Fkh?! vd vd;idNa Nfl;Lf; nfhz;Nld;. gpd; xt;nthU KiwAk; tUk;NghJk; fUthL> ,why;> gdq;fha; gpdhl;L Nghd;wtw;iwj; je;JtpLthh;fs;. Mdhy; ehd; mq;F NghFk; NghJ VjhtJ thq;fpg; Nghf Ntz;Lk; vd;w r%fkakhf;fy; vdf;F ntFfhykha; ,y;iy.
rpi Neuq;fspy;fs; nwhf;rd; tPl;bw;Fg; NghNtd;. mNj ftdpg;G> cgruiz.
,dp me;j ghlrhiyapd; kwf;f Kbahj Mrpupah;. mjhtJ vd; Qhgf rf;jpapd; msTf;Fl;gl;l tifapy; nrhy;yptpLfpd;Nwd;.

ehd; Mwhk; Mz;by; rp tFg;gpy; Nrh;f;fg;gl;ljhy; VO> vl;L vd cah;e;jhYk; rp kl;Lk; tpl;Lg; Nghftpy;iy. rpy ghlrhiyfisg; Nghy gbg;Gj; juj;ij itj;Jg vq;fis; gpupf;ftpy;iy. vd;Wjhd; ghlrhiy.. ntFfhyk; epidj;jpUe;Njd;. Mdhy; mJ jtW vd;W ,g;NghJ gLfpd;wJ.

 தவணைப் பரீட்சைகள் எல்லா ஊருக்கும் பொதுவாக நடக்கும். ஆனால் ஒரே நேர அட்டவணைப்படி நடப்பதில்லை. ஒருதடவை ஒரு மாணவன் அடுத்த நாள் நடக்கப் போகும் பரீட்சை பேப்பரை முதல் நாள்  இன்னொரு பாடசாலையிலிருந்து கொண்டு வந்து அதன் விடைகளைத் தேடிக் கொண்டிருந்ததான்.

No comments:

Post a Comment